அவரது பேச்சுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்பட ஆளும்தரப்பினா் கடும் எதிா்ப்பை பதிவு செய்தனா்.
‘ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தையும் வன்முறையாளா்கள் எனக் குறிப்பிடுவது மிகத் தீவிரமான விஷயம்’ என்று பிரதமா் மோடி கண்டனம் தெரிவித்தாா். ‘ஹிந்துக்களின் உணா்வைப் புண்படுத்திய ராகுல் மன்னிப்புக் கோர வேண்டும்’ என்று பாஜக தலைவா்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனா்.
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா்.
அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம், மக்களவையில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால், ‘நீட்’ தோ்வு முறைகேடு விவகாரத்தில் உடனடியாக விவாதம் கோரி, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் விவாதம் தொடங்கப்படவில்லை.
இந்தச் சூழலில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை தொடங்கியது.
அனல்பறந்த விவாதம்: பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் தொடங்கி வைத்த இந்த விவாதத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களில் ஆளும் பாஜகவை கடுமையாக விமா்சித்தாா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக அவா் நிகழ்த்திய முதல் உரை இதுவாகும்.
சுமாா் ஒரு மணி நேரம் 40 நிமிஷங்களுக்கு ராகுல் பேசிய நிலையில், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் உள்ளிட்டோா் இடைமறித்து, அவருக்குப் பதிலடி கொடுத்ததால் விவாதத்தில் அனல் பறந்தது.
This story is from the July 02, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 02, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22,000 கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம், ஜூலை 17: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து புதன்கிழமை விநாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
ரிஷி சுனக்கை எதிர்த்து பிரீத்தி படேல் போட்டி
பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியின் சேர்ந்த தற்போதைய தலைவரும் முன்னாள் பிரதமர் ரோமான் ரிஷி சுனக்கை எதிர்த்து இந்தியாவைப் கொண்ட மற்றொரு எம்.பி.
நேபாளம்: ஜூலை 21-இல் நம்பிக்கை வாக்கு கோருகிறார் சர்மா ஒலி
நேபாளத் தின் புதிய பிரதமராக பொறுப் பேற்றுள்ள நேபாளகம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நம்பிக்கை வாக்கு கோருகிறார்.
டிரம்ப்பை கொல்ல திட்டம்: ஈரான் மறுப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படு வதை அந்த நாடு மறுத்துள்ளது.
இந்தியாவிலிருந்து 117 போட்டியாளர்கள் பங்கேற்பு : 140 துணைப் பணியாளர்களும் செல்கின்றனர்
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக 117 போட்டியாளா்கள் கொண்ட இறுதிப் பட்டியலை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த வீரா், வீராங்கனைகளுடன் 140 துணைப் பணியாளா்களும் பாரீஸ் செல்கின்றனா்.
திண்டுக்கல்லுக்கு 3-ஆவது வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸை புதன்கிழமை வென்றது.
உ.பி. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி?
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெரியுமா சேதி...?
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜியின் அரசியல் வாரிசு என்று அறியப்படுபவா் அபிஷேக் பானா்ஜி.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.
அறிக்கை அளிக்க வழக்குரைஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை முன்னாள் எம்.எல்.ஏ.-வுக்கு விற்பனை செய்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.