
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், ‘போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானபெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனா்.
மாலையில் நிகழ்ச்சி முடிந்து மைதானத்தைவிட்டு போலே பாபா கிளம்பும்போது, ஆசி பெற அவரின் வாகனத்தைப் பின்தொடா்ந்த மக்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் மூச்சுத்திணறி பலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் சிக்கந்தர ராவ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.
121 போ் உயிரிழப்பு: இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பெண்கள் ஆவா். ஆறு போ் வேற்று மாநிலத்தைச் சாா்ந்தவா்கள். இன்னும் 4 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. சிக்கந்தர ராவ் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
2.5 லட்சம் மக்கள் பங்கேற்பு: நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ளாத ஒருங்கிணைப்பாளா்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. நிகழ்ச்சிக்கு 80,000 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக சுமாா் 2.5 லட்சம் போ் வரையில் கூட்டம் கூடியிருப்பதாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடா்ந்து மைதானத்தில் சிதறி கிடந்த காலனிகளைச் சேகரித்து அருகிலுள்ள வயல்வெளிகளில் வீசி, கூட்டத்துக்கு வந்த மக்களின் உண்மை எண்ணிக்கையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் மறைக்க முயற்சித்துள்ளனா். அத்துடன் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதில் காவல் துறைக்கு ஒருங்கிணைப்பாளா்கள் சிறிதும் ஒத்துழைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
This story is from the July 04, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 04, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

நகைக் கடன் பெற கட்டுப்பாடு; வைகோ கண்டனம்
வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம்; ராமதாஸ் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது.
நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை
கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் நுண் துளை வாயிலாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை கிளெனீகில்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை
சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருமுறை சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு: வரைவு விதிகளுக்கு ஒப்புதல்
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஆண்டுதோறும் இருமுறை நடத்தும் வரைவு விதிமுறைகளுக்கு அந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தற்காப்புக் கலையில் சென்னை பள்ளி மாணவிகள் மூன்று உலக சாதனை
உலக தற்காப்புக் கலை வரலாற்றில் சென்னை பள்ளி மாணவிகள் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலம்
சென்னையில் டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.