நாட்டில் கடந்த 1975, ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதி 'அரசமைப்பு படுகொலை தினமாக' அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அரசமைப்புச் சட்டத்தை முன் வைத்து, ஆளும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில், 'கடந்த 1975, ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய அரசால் அதிகார துஷ்பிரயோகம் கட்டவிழ்க்கப்பட்டது. நாட்டு மக்கள் அத்துமீறல்களுக்கும் அராஜகங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் மீண்டெழும் ஜனநாயக வலிமையின் மீது மக்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே, அவசரநிலை காலகட்டத்தில் பாதிப்பை எதிர்கொண்டவர்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகப் போராடியவர்களை நினைவுகூரவும், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசமான அதிகார துஷ்பிரயோகத்தை எந்த விதத்திலும் இந்திய மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை மீண்டும் உறுதிசெய்யவும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதி அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மக்களின் உணர்வை கெளரவிக்கும் நோக்கில்...': மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1975, ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவின் குரல்வளையை நெரித்தார். இது, சர்வாதிகார மனநிலையின் வெட்கக்கேடான வெளிப்பாடு.
This story is from the July 13, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 13, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
6 பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷியா உத்தரவு
தங்கள் நாட்டில் உளவு பாா்த்ததாகக் கூறி, பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த ஆறு தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற ரஷியா உத்தரவிட்டுள்ளது. கியொ் ஸ்டாா்மா்.
ஐஸ்லாந்து, செக் குடியரசை வீழ்த்தியது இந்தியா
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆவது சுற்றிலும் ஓபன், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன.
அதானி குழும பிரதிநிதிக்கு சொந்தமான ரூ.2,610 கோடி முடக்கம்
அதானி குழுமத்தின் பிரதிநிதியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக தைவானைச் சோ்ந்தவரின் ரூ.2,610 கோடியை ஸ்விட்சா்லாந்து முடக்கியுள்ளது.
இந்தியாவின் கருத்துகளை கேட்க தயாராக இருங்கள்: ஜெய்சங்கர்
‘இந்தியாவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதால் கவலையில்லை.
சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்
சேத்தியாதோப்பு -விக்கிரவாண்டி வழியாக சென்னை செல்லும் புறவழிச்சாலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் சரிசெய்யப்பட்டு, விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி.
சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்
மாநிலங்களில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜர்
அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப் பாவு, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்.
தொண்டர்களின் நியாய உணர்வுக்கு மதிப்பளிப்பேன்
தொண்டா்களின் குரலில் ஒலிக்கும் நியாயமான உணா்வுக்கு மதிப்பளிப்பேன் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று விநாயகர் சிலை கரைப்பு
சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை (செப்.14) விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் அதிநவீன கருவி
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்தக்கூடிய ரூ.2.76 கோடியிலான அதிநவீன கருவியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.