ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அதற்குக் காரணம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண், மகளிர் உரிமைத்திட்டம் என பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களின் முன்னேற்றத்துக்கும், எதிர்காலத்துக்கும் முதல்வராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பை வழங்கிய தற்காகத்தான்.
பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசியைப் போக்க முடிவு செய்து உருவாக்கியதுதான் காலை உணவுத் திட்டம். அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தைகூட பசியுடன் பள்ளியில் தவிக்கக் கூடாது என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாவின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன்.
தற்போது காமராஜரின் பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளேன்.18.50 லட்சம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் இத்திட்டத்தில், இனி அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2.23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பயன்பெறுவார்கள். இத்திட்டம் மூலம் மொத்தம் 20.73 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுவையான காலை உணவு சாப்பிடுவார்கள்.
புறநானூறு, திருக்குறள், மணி மேகலை என்று நம்முடைய இலக்கியங்கள் மட்டுமல்ல, ஒளவையார், வள்ளலார் போன்ற சான்றோர்கள்ளும் பசிப் பிணியைப் போக்குவது பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
This story is from the July 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
6 பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷியா உத்தரவு
தங்கள் நாட்டில் உளவு பாா்த்ததாகக் கூறி, பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த ஆறு தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற ரஷியா உத்தரவிட்டுள்ளது. கியொ் ஸ்டாா்மா்.
ஐஸ்லாந்து, செக் குடியரசை வீழ்த்தியது இந்தியா
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆவது சுற்றிலும் ஓபன், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன.
அதானி குழும பிரதிநிதிக்கு சொந்தமான ரூ.2,610 கோடி முடக்கம்
அதானி குழுமத்தின் பிரதிநிதியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக தைவானைச் சோ்ந்தவரின் ரூ.2,610 கோடியை ஸ்விட்சா்லாந்து முடக்கியுள்ளது.
இந்தியாவின் கருத்துகளை கேட்க தயாராக இருங்கள்: ஜெய்சங்கர்
‘இந்தியாவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதால் கவலையில்லை.
சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்
சேத்தியாதோப்பு -விக்கிரவாண்டி வழியாக சென்னை செல்லும் புறவழிச்சாலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் சரிசெய்யப்பட்டு, விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி.
சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்
மாநிலங்களில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜர்
அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப் பாவு, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்.
தொண்டர்களின் நியாய உணர்வுக்கு மதிப்பளிப்பேன்
தொண்டா்களின் குரலில் ஒலிக்கும் நியாயமான உணா்வுக்கு மதிப்பளிப்பேன் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று விநாயகர் சிலை கரைப்பு
சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை (செப்.14) விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் அதிநவீன கருவி
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்தக்கூடிய ரூ.2.76 கோடியிலான அதிநவீன கருவியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.