சட்ட மசோதாவுக்கு கர்நாடக மாநில தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சட்ட மசோதா நிறைவேற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை கட்டாயமாக்கும் வகையில் "கர்நாடக மாநில உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதா 2024' க்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு விகிதம்: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் மேலாண்மை வேலைகளில் 50 சதவீதம், மேலாண்மை அல்லாத வேலைகளில் 75 சதவீதம், "சி', "டி' பிரிவு வேலைகளில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வழங்க இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.
இந்த சட்டத்தின்படி பத்தாம் வகுப்பு தேர்வில் மொழிப் பாடமாக கன்னடம் படிக்காதவர்கள், கன்னடத் தேர்வைத் தனியாக எழுதித் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த சட்ட மசோதாவின் விதிகளை அமல்படுத்துவதற்கென உதவி தொழிலாளர் ஆணையர் அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். சட்ட விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூலை 18) தாக்கல் செய்ய முதல்வர் சித்தராமையா திட்டமிட்டிருந்தார்.
This story is from the July 18, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 18, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
6 பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷியா உத்தரவு
தங்கள் நாட்டில் உளவு பாா்த்ததாகக் கூறி, பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த ஆறு தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற ரஷியா உத்தரவிட்டுள்ளது. கியொ் ஸ்டாா்மா்.
ஐஸ்லாந்து, செக் குடியரசை வீழ்த்தியது இந்தியா
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆவது சுற்றிலும் ஓபன், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன.
அதானி குழும பிரதிநிதிக்கு சொந்தமான ரூ.2,610 கோடி முடக்கம்
அதானி குழுமத்தின் பிரதிநிதியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக தைவானைச் சோ்ந்தவரின் ரூ.2,610 கோடியை ஸ்விட்சா்லாந்து முடக்கியுள்ளது.
இந்தியாவின் கருத்துகளை கேட்க தயாராக இருங்கள்: ஜெய்சங்கர்
‘இந்தியாவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதால் கவலையில்லை.
சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்
சேத்தியாதோப்பு -விக்கிரவாண்டி வழியாக சென்னை செல்லும் புறவழிச்சாலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் சரிசெய்யப்பட்டு, விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி.
சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்
மாநிலங்களில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜர்
அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப் பாவு, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்.
தொண்டர்களின் நியாய உணர்வுக்கு மதிப்பளிப்பேன்
தொண்டா்களின் குரலில் ஒலிக்கும் நியாயமான உணா்வுக்கு மதிப்பளிப்பேன் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று விநாயகர் சிலை கரைப்பு
சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை (செப்.14) விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் அதிநவீன கருவி
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்தக்கூடிய ரூ.2.76 கோடியிலான அதிநவீன கருவியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.