சா்வதேச அளவில் நடைபெறும் முக்கியமான விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஒலிம்பிக்ஸ், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அந்த வகையில் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில், இம்மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 32 விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் நடைபெறும் பந்தயங்களில் சுமாா் 200 நாடுகளில் இருந்து, ஏறத்தாழ 10,000 போ் பங்கேற்க இருக்கின்றனா்.
இதில் பங்கேற்பதற்கான போட்டியாளா்கள் மற்றும் அணியினா், தகுதிப்போட்டிகள், உலகத் தரவரிசை போன்ற தகுதிகளின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அந்த வகையில் இந்தியாவிலிருந்து மொத்தம் 117 போட்டியாளா்கள் இந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் களம் காண இறுதி செய்யப்பட்டுள்ளனா். இந்தியாவுக்கு இது 26-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டியாகும்.
போட்டியில் பங்கேற்க இருக்கும் 117 போட்டியாளா்கள், 140 துணைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பட்டியலுக்கு மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த ஒப்புதல் கடிதத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அனுப்பியுள்ளது. அதன்படி, போட்டியாளா்களிலேயே அதிகபட்சமாக, தடகளத்தில் 29 போ் பங்கேற்கின்றனா். குறைந்தபட்சமாக குதிரையேற்றம், ஜூடோ, துடுப்புப் படகு, பளுதூக்குதல் ஆகியவற்றில் தலா 1 போட்டியாளா் களம் காண்கின்றனா்.
செஃப் தி மிஷன்...
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவின் தலைவராக (செஃப் தி மிஷன்), முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரும், லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ககன் நரங் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறாா்.
This story is from the July 18, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 18, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வங்கதேசம்: கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
வங்கதேச மாணவா் போராட்டத்தின்போது பொற்கொல்லா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அந்த நாட்டின் முன்னாள் வா்த்தகத் துறை அமைச்சா் திப்பு முன்ஷியும், நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவா் ஷிரின் ஷா்மின் சௌத்ரியும் கைது செய்யப்பட்டனா்.
3-ஆவது சுற்றில் சபலென்கா, கௌஃப்
ஜோகோவிச் புதிய சாதனை
ரேங்கிங் சுற்றில் ஷீத்தல் தேவிக்கு 2-ஆம் இடம்
பாரீஸ் பாராலிம் பிக் போட்டியில் மகளிர் வில்வித் தைக்கான ரேங்கிங் சுற்றில் இந்தியாவின் ஷத்தல் தேவி 2-ஆம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர், நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
கேரளம்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு
பதவி விலக வலியுறுத்தல்
இஸ்லாமாபாதில் எஸ்சிஓ மாநாடு: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அக்டோபா் மாதம் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு அந்நாட்டு அரசு வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகம்
பிரிட்டன் கல்வி நிறுவனத்துக்கு ஒப்புதல்
மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலம்
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்
தமிழ்நாட்டில்தான் மின்சாரக் கட்டணம் குறைவு
மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் மின்சார கட்டணம் குறைவாக உள்ளது என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.