
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்த மூர்த்தி தலமாக விளங்குகிறது. இங்கு அமாவாசை நாள்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தந்து தங்களது முன்னோர்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில், ஆடி அமாவாசையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்தில் குவிந்தனர். அவர்கள் அக்னித் தீர்த்தக் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பின்னர், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடி சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.
This story is from the August 05, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 05, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ரயில் நிலைய பெயர்ப் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாதம் சிறை
ஹிந்தியில் எழுதப்பட்ட ஊர்ப் பெயரை அழிக்கிறோம் என்ற பெயரில் ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் கருப்பு மை பூசி சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்ததுள்ளது.

ஜெயலலிதா பிறந்த நாள்: பிரதமர் மோடி புகழாரம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி (பிப். 24) அவரை நினைவுகூர்ந்து, 'கருணை உள்ளம் கொண்ட தலைவர்; தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்' என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப உத்தரவு
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரூ. 20 லட்சம் வழிப்பறி வழக்கு: வணிக வரித் துறை அதிகாரிகள் இருவர் கைது
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி வழக்கில், வணிக வரித் துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஹிந்தி எதிர்ப்பு நாடகமாடுகிறது திமுக: அண்ணாமலை
ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை திமுக மீண்டும் தொடங்கியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
வளர்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனை திட்டம் அறிமுகம்
தமிழகம் முழுவதும் வளர்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபுணருமான டி.எஸ்.சந்திரசேகர் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்கள் சேர்ப்பு: இளைஞர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்களை சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

புதிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தேர்தல் பணி குறித்து அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
வேலை வாங்கித் தர லஞ்சம் பெற்றதாக வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிரான ராஜேந்திர பாலாஜி மனு மீது பிப்.28-இல் விசாரணை
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை பிப். 28-ஆம் தேதி பட்டியலிட உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பிஎம் கிசான்: 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் (விவசாயிகள் உதவித் தொகை) 19-ஆவது தவணையாக சுமார் 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடிக்கு அதிகமான நிதியை பிரதமர் மோடி திங்கள்கிழமை விடுவித்தார்.