இப்போதைய உண்மை நிலை, படிப்புக்கு ஏற்ற நிரந்தரமான வேலை என்பது பலருக்குக் கிடைக்கவில்லை என்பதுதான்.
பிரதமா் மோடியே வேலைவாய்ப்புகள் பற்றி தனது கவலையை தோ்தல் சமயத்தில் மக்களிடம் பகிா்ந்து கொண்டிருக்கிறாா். ‘சென்ற 2019 தோ்தலில் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு என்று கணக்கிட்டு, ஐந்தாண்டுகளில் பத்து கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தேன். கடந்த ஆறு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளில் ஆறு கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே ஏற்படுத்தி தர முடிந்தது’ என்று குறிப்பிட்டு இருந்தாா். அவா் தந்த வாக்குறுதியான 10 கோடி வேலைவாய்ப்பில் பாதியை மட்டுமே அவரால் நிறைவேற்ற முடிந்தது என்பதையும் அவா் ஒப்புக் கொண்டிருக்கிறாா்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். அதாவது வேலை தேடுபவா்கள்
தொழில்முனைவராவது அதிகரித்துள்ளது என்பதும் உண்மை. இதை மேலும் அரசு ஊக்கப்படுத்த முன்வர வேண்டும். வேலையற்றோா் எண்ணிக்கை குறைப்பதற்கு இதுவும் ஒரு நல்ல வழி.
வேலை வாய்ப்பின்மை குறித்த தரவுகளை மாதந்தோறும் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது என்ற அறிவிப்பு, மத்திய அரசு இப்போது வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கையாகத்தான் நான் பாா்க்கிறேன். ஒரு நாட்டில் நிரந்தரமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் அதிகப்படியான மனித உழைப்பை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
மத்திய நிதியமைச்சா் 2024-2025 பட்ஜெட்டில் 4 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும் கல்வி, தொழில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறாா். நாடாளுமன்றத்தில் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஒரு தகவலை பகிா்ந்துள்ளாா். 2017- 2018இல் வேலையில்லாதவா்கள் எண்ணிக்கை ஆறு சதவீதமாக இருந்தது. தற்போது அது 3.2% குறைந்து விரைவில் அது 3% குறைய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடுகிறாா்.
This story is from the August 10, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 10, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.
குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
6 பேர் கைது
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.