ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனுக்கு முன்னோட்டமாக இருக்கும் இந்தப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், உலகின் நம்பர் 1 வீரரான சின்னர் 7-6 (7/4), 6-2 என்ற நேர் செட்களில், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை வீழ்த்தினார். இருவருக்குமே இந்தப் போட்டியில் இதுவே முதல் இறுதிச்சுற்றாகும். இதற்கு முன் இருவரும் இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 3-ஆவது சுற்று வரை வந்துள்ளனர்.
டியாஃபோவை 5-ஆவது முறையாகச் சந்தித்த சின்னர், 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். வெற்றிக்குப் பிறகு பேசிய சின்னர், "சர்வதேச டென்னிஸில் தற்போது நான் இருக்கும் இடத்துக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிலையை அப்படியே தொடர முயற்சி செய்வேன். அடுத்ததாக, யுஎஸ் ஓபன் போட்டிக்கு தயாராவதே முக்கியமானது' என்றார்.
முன்னதாக, முதல் செட்டை டை பிரேக்கர் வரை கொண்டு சென்ற டியாஃபோ, அதில் தொடர்ந்து 3 தவறுகளைச் செய்து செட்டை இழந்தார். 2-ஆவது செட்டில் சின்னர் 5-1 என முன்னிலையில் இருக்க, டியாஃபோ 3 மேட்ச் பாய்ன்ட்களை பெற்று 5-2 என முன்னேறினார். எனினும், சின்னர் ஒரு சர்வ் மூலமாக செட்டை தனதாக்கி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
சின்னருக்கு இது 3-ஆவது மாஸ்டர்ஸ் பட்டமாகும். வெற்றியை இழந்தாலும், இறுதிச்சுற்று வரை வந்ததன் மூலமாக உலகத் தரவரிசையில் 20-ஆவது இடத்துக்கு வந்திருக்கிறார் டியாஃபோ. தற்போது, டாப் 20 இடத்தில் டெய்லர் ஃப்ரிட்ஸ் (12-ஆம் இடம்), பென் ஷெல்டன் (13), டாமி பால் (14), செபாஸ்டியன் கோர்டா (16), ஃபிரான்சஸ் டியாஃபோ (20) என 5 அமெரிக்கர்கள் உள்ளனர். 1997-க்குப் பிறகு ஏடிபி தரவரிசையில் டாப் 20 இடத்தில் 5 அமெரிக்கர்கள் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
பரிசுத் தொகை & ரேங்கிங் புள்ளிகள்
This story is from the August 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.