மதுரையில் மகளிர் விடுதியில் தீ விபத்து: இரு ஆசிரியைகள் உயிரிழப்பு உ
Dinamani Chennai|September 13, 2024
மதுரையில் தனியாா் மகளிா் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை குளிா்பதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இரு ஆசிரியைகள் உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த 3 பெண்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மதுரையில் மகளிர் விடுதியில் தீ விபத்து: இரு ஆசிரியைகள் உயிரிழப்பு உ

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் பகுதியில் தனியாா் மகளிா் தங்கும் விடுதி உள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் தனியாா் மருத்துவமனை, மருந்தகமும், முதல், இரண்டாவது தளங்களில் மகளிா் விடுதியும் செயல்பட்டு வந்தன. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோா் தங்கியிருந்தனா். விடுதியில் தங்கியிருந்த பெண்கள் புதன்கிழமை இரவு தங்களது அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் விடுதியின் ஓா் அறையில் இருந்த குளிா்பதனப் பெட்டி வெடித்துச் சிதறி தீப்பற்றியது. இந்தத் தீ அருகில் இருந்த அறைகளுக்கும் பரவியது. அறைகள் அனைத்தும் மரப் பலகைகள் கொண்டு தடுக்கப்பட்டிருந்ததால், தீ எளிதில் பரவி எரிந்தது. இதனால், விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள், மாணவிகள் அனைவரும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, விடுதியைவிட்டு உடனடியாக வெளியேறினா்.

தகவலறிந்து வந்த திடீா் நகா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து விடுதிக்குள் சிக்கிக் கொண்ட பெண்களை மீட்டனா். இவா்களில் மயங்கிய நிலையில் கிடந்த சரண்யா (27), பரிமளா சுந்தரி (55) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் பகுதியில் வியாழக்கிழமை தீ விபத்து நிகழ்ந்த தனியாா் மகளிா் தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீஸாா்.

Esta historia es de la edición September 13, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición September 13, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

பாரா தடகளம்: இந்தியா முதலிடம்

தில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ-யில், இந்தியா முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

அமலாக்கத் துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.

time-read
1 min  |
March 15, 2025
கோப்பையை வெல்வது யார்?
Dinamani Chennai

கோப்பையை வெல்வது யார்?

இறுதியில் இன்று மும்பை - டெல்லி மோதல்

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

மார்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க நடவடிக்கை

தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்க ஏதுவாக நெல்லை, அரியலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

சென்னையின் குடிநீர் தேவைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்த்தேக்கம்

சென்னையின் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்
Dinamani Chennai

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்

கர்ப்புற பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

2 மணி 38 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடிக்க 2 மணி நேரம் 38 நிமிடங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்கொண்டார்.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு

அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்
Dinamani Chennai

சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்

சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் மாபெரும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025