ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், மாம்பாக்கம் கிராமம், வாழப்பந்தல் சாலையைச் சேர்ந்தவர் குட்டி (எ) செல்வம் (50). இவருடன் அருகிலுள்ள மாம்பாக்கம், மேலப்பழுந்தை, லாடாவரம், குந்தனூர், கூராம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 22 பேர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த 23-ஆம் தேதி இரவு வேனில் புறப்பட்டனர். மாம்பாக்கத்தைச் சேர்ந்த பிள்ளையார் மகன் வசந்தகுமார் (36) வேனை ஓட்டினார்.
திருச்செந்தூரில் செவ்வாய்கிழமை சுவாமி தரிசனம் முடித்த பின்பு, பிற்பகலில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கிருந்து இரவு 7 மணிக்கு சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.
இவர்களது வேன் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சிறுத்தனூர் ஜெயசூரியா நகர் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
This story is from the September 26, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 26, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
லெபனான் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
ஹிஸ்புல் லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேல், அந்த நாட்டின் எல்லை கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கான்பூர் டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிக் கொடி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலம், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது.
கிழக்கு லடாக் எல்லைச் சூழல் இயல்பாக இல்லை: ராணுவ தலைமைத் தளபதி
கிழக்கு லடாக் எல்லையில் இயல்பான சூழல் நிலவவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.
பொய் வாக்குறுதிகளே காங்கிரஸின் அரசியல்
‘பொய் வாக்குறுதிகள் மட்டுமே காங்கிரஸின் அரசியல்; அதேநேரம், கடின உழைப்பு மற்றும் தீா்வு சாா்ந்த அரசியலை பாஜக முன்னெடுக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடி எப்படி செலவிடப்பட்டது?
மத்திய அரசு ஒதுக்கிய ரூ. 1.17 லட்சம் கோடியை மேற்கு வங்க அரசு எந்தெந்த பணிகளுக்காக, எப்படி செலவிட்டது என்பது குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் வலியுறுத்தியுள்ளார்.
பழனி மலைக் கோயில் ராஜகோபுர சுதை வளைவு சேதம்
பழனி மலைக் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தின் சுதை வளைவு சேதமடைந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
ஜமைக்கா ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி
ஜமைக்கா ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோடு, அவா்களின் திறன் கட்டமைப்புக்கு இந்தியா பங்காற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரஜினிகாந்துக்கு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை
ரத்த நாள வீக்க பாதிப்புக்குள்ளான நடிகா் ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டதாகவும், அவா் இரு நாள்களில் வீடு திரும்புவாா் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் பொறுப்பேற்பு
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. விஜயகுமார் பொறுப்பேற்றார்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்க மறுக்கக் கூடாது
ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிா்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகளை விதிக்கவோ கூடாது என தமிழக காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.