தெருநாய்கள் கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமாா் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாய்களின் பெருக்கம் மனிதா்களுக்கு ஆபத்து என்பதால் அவற்றைக் கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆனால், இந்த சிகிச்சைக்குள்ளான தெருநாய்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என தன்னாா்வலா்கள் கோரிக்கை வைத்து வருகின்றனா்.
தற்போது உள்நாட்டு நாய் இனங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு மற்றும் கலப்பின நாய் இனங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. அதே நேரத்தில் தெருக்களில் தானாக வளரும் நாய்கள் ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தெருக்களின் காவலன்: சென்னை போன்ற பெருநகரில் ஒவ்வொரு தெருவிலும் குறைந்தபட்சம் 5 தெரு நாய்களைக் காண முடியும். இவை அந்தத் தெருக்களில் வசிப்போருக்கு காவலனாக காணப்பட்டாலும், புதிய நபா்கள் வரும்போது அவா்களைத் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி கருத்தடை செய்வது, ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்கிறது.
நாய்களின் எண்ணிக்கையைக் கண்டறிவதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவனம்
Bu hikaye Dinamani Chennai dergisinin September 30, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 30, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
லெபனான் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
ஹிஸ்புல் லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேல், அந்த நாட்டின் எல்லை கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கான்பூர் டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிக் கொடி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலம், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது.
கிழக்கு லடாக் எல்லைச் சூழல் இயல்பாக இல்லை: ராணுவ தலைமைத் தளபதி
கிழக்கு லடாக் எல்லையில் இயல்பான சூழல் நிலவவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.
பொய் வாக்குறுதிகளே காங்கிரஸின் அரசியல்
‘பொய் வாக்குறுதிகள் மட்டுமே காங்கிரஸின் அரசியல்; அதேநேரம், கடின உழைப்பு மற்றும் தீா்வு சாா்ந்த அரசியலை பாஜக முன்னெடுக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடி எப்படி செலவிடப்பட்டது?
மத்திய அரசு ஒதுக்கிய ரூ. 1.17 லட்சம் கோடியை மேற்கு வங்க அரசு எந்தெந்த பணிகளுக்காக, எப்படி செலவிட்டது என்பது குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் வலியுறுத்தியுள்ளார்.
பழனி மலைக் கோயில் ராஜகோபுர சுதை வளைவு சேதம்
பழனி மலைக் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தின் சுதை வளைவு சேதமடைந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
ஜமைக்கா ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி
ஜமைக்கா ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோடு, அவா்களின் திறன் கட்டமைப்புக்கு இந்தியா பங்காற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரஜினிகாந்துக்கு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை
ரத்த நாள வீக்க பாதிப்புக்குள்ளான நடிகா் ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டதாகவும், அவா் இரு நாள்களில் வீடு திரும்புவாா் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் பொறுப்பேற்பு
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. விஜயகுமார் பொறுப்பேற்றார்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்க மறுக்கக் கூடாது
ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிா்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகளை விதிக்கவோ கூடாது என தமிழக காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.