
தில்லியில் சாகித்திய அகாதெமியின் தலைவர் மாதவ் கௌஷிக் தலைமையில் நடைபெற்ற அகாதெமியின் கூட்ட முடிவில் 8 கவிதை நூல்கள், 3 நாவல்கள், 2 சிறுகதை நூல்கள், 3 கட்டுரை நூல்கள், 3 இலக்கிய விமர்சனங்கள், ஒரு நாடகம், ஓர் ஆய்வு நூல் என 21 மொழிகளின் படைப்புகள் 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய விருதுக்கு தேர்வாயின. இதுகுறித்த அறிவிப்பை அகாதெமியின் செயலர் டாக்டர் கே. ஸ்ரீனிவாசராவ் வெளியிட்டார்.
இதில், வரலாற்றுப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய 'திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908' என்ற தமிழ் நூலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1908-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி வ.உ.சி. கைதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக ஏற்பட்ட எழுச்சி குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் இந்நூல் விரிவாக ஆராய்ந்துள்ளது.
விருதாளர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் ரொக்கம், செப்புப் பட்டயம், பொன்னாடை ஆகியவை தில்லி கோபர்நிகஸ் மார்கில் உள்ள கமானி அரங்கில் 2025, மார்ச் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படும்.
This story is from the December 19, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 19, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

மெத்வதெவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரர்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருணைப் பணி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை
கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி
இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக மோரீஷஸ் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்
செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.
வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு: பாஜக குற்றச்சாட்டு
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது
நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு
மும்பையில் மீண்டும் தரையிறக்கம்