மாணவப்பருவத்தினர் வன்முறையில் நாட்டம் கொள்வது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, சாதி, சமயங்களின் அடிப்படையில் விருப்பு வெறுப்பைக் காட்டுவது, உள்ளூர் உலக அரசியல் விவகாரங்களில் தேவையற்ற ஆர்வத்தை வெளிப்படுத்துவது ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.
‘இளம் கன்று பயம் அறியாது’ என்பதற்கேற்ப, நெறியற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கான வேட்கையும் வேகமும் மாணவப் பருவத்தில் உருவாவது இயற்கையே. ஆனால், எதிர்கால முன்னேற்றம் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே நினைவில் வைத்து நெறியற்ற நடவடிக்கைகளை நாடாமல் இருக்கப் பழக வேண்டும்.
தனியொரு மாணவன் நல்லவனாகவே இருப்பான். ஆனால், பல மாணவர்கள் ஒன்று கூடினால் மோசமானவர்களாக நடந்து கொள்வார்கள் என்று பொருள்படும் ஆங்கிலப் பழமொழியை நிரூபிப்பது போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடும் வேளைகளில் எத்தகைய அத்துமீறல்களிலும் ஈடுபடுகின்ற தைரியம் அவர்களுக்கு உருவாகிவிடுகின்றது. அதன் வெளிப்பாடாகவே நீண்ட காலமாகத் தொடரும் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்குகின்றன.
ஒரே கல்லூரி அல்லது பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது, தாங்கள் பயிலும் கல்லூரி தவிர்த்த இதர கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை வம்புக்கு இழுப்பது, பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் கூட்டமாக ஏறி ரகளை செய்வது, கல்வீசுவது, பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுவெளிகளில் திரிவது ஆகிய செயல்களில் ஈடுபடும் மாணவர்களால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது.
Diese Geschichte stammt aus der March 17, 2025-Ausgabe von Dinamani Cuddalore.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 17, 2025-Ausgabe von Dinamani Cuddalore.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
உயர்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம்
உயர்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் 4 காவல் துறையினர், 4 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
பயங்கரவாதிகள் தாக்குதல்
தேசிய கைப்பந்து போட்டி: ஹரியாணா சாம்பியன்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான (அமர்ந்து விளையாடும்) 13-ஆவது தேசிய கைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் ஹரியாணா மாநில அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன.
போயிங் நிறுவனத்தில் ஆள் குறைப்பு: இந்தியாவில் 180 பேர் பணிநீக்கம்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்தியப் பிரிவில் 180 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது
லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை
கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
4 சீனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீனாவில் தயாரிக்கப்படும் 'வேக்வம் ஃபிளாஸ்க்' (வெந்நீர் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்தது.
மத ரீதியிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது
மத ரீதியிலான இடஒதுக்கீட்டை அரசியல் சாசனம் அனுமதிப்பதில்லை; அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே கருத்து தெரிவித்தார்.
நகராட்சி வாகனத்தை திருட முயன்றவர் கைது
புதுச்சேரியில் நகராட்சி வாகனத்தை திருட முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
5 வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் போப் பிரான்சிஸ்
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.