சென்னை, மார்ச் 13:
தமிழகத்தில் உள்ள 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் தினமும் சுமார் ரூ.100 கோடிக்கு மது விற்கப்படுகிறது. தற்போது தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக வி. செந்தில் பாலாஜி உள்ளார். டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பெருமளவு முறைகேடு நடைபெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்தப் புகார்களிலும், குற்றச்சாட்டுகளிலும் இருந்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அண்மையில் விசாரணையைத் தொடங்கினர். அதேபோல டாஸ்மாக் அதிகாரிகள் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஊழல் தடுப்புத் துறையினர் பதிவு செய்த சுமார் 35 வழக்குகளையும் அமலாக்கத் துறையினர் தங்களது விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
அமலாக்கத் துறை சோதனை: இந்நிலையில், அமலாக்கத் துறையினர் தமிழகம் முழுவதும் சுமார் 25 இடங்களில் கடந்த வாரம் 3 நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், தியாகராயநகர் திலக் சாலையில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு மதுபான நிறுவனம், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்என்ஜெ மதுபான நிறுவனம், அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கு உள்ளிட்ட 7 இடங்கள் மற்றும் விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மதுபான ஆலைகள், நிறுவனங்கள், கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களின் வீடு ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது.
この記事は Dinamani Karaikal の March 14, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Karaikal の March 14, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்கள்
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த மேலும் ஒருவரின் உடல் ஒரு மாதத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.
தூய்மைப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க மாட்டோம்
அமைச்சர் கே.என்.நேரு
வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
ஷ்ரேயஸ் ஐயர் விளாசல்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்
சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது.
வரப்பு உளுந்து சாகுபடி: 50% மானியத்தில் விதை விநியோகம்
திருவாரூர் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு
ஜம்மு-காஷ்மீரில் நீர்வளத் துறை பணியாளர்களின் வேலைநிறுத்த விவகாரத்தை முன்வைத்து சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.