சில காலமாக, குற்றங்களில் ஒரு புதிய பரிமாணத்தைக் காண்கிறோம். அதிக அளவில் பதின்ம வயதுச் சிறுவர்கள், அதிலும் பள்ளி மாணவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அதே வேளையில், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை எல்லை கடந்து போய்க் கொண்டிருப்பது இந்தச் சமுதாயத்தின் மீது கோபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கள்ளம், கபடம் இல்லாத பிஞ்சுகளில் ஒரு சாரார், அதாவது சிறுவர்கள் குற்றவாளிகளாகவும், மற்றொரு சாரார், அதாவது சிறுமியர் குற்றமிழைக்கப்படுபவர்களாகவும் மாறிக் கொண்டிருப்பது, நம் சமுதாயத்தில் ஆண், பெண் பேதம் எவ்வளவு அதிகம் உள்ளது என்பதையே காட்டுகிறது.
இந்தக் கொடுங் குற்றங்களை அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. அதுதான் தினம் தினம் இவற்றைப் பற்றிய விலாவாரியான செய்திகளையும், ஒன்றுக்கும் உதவாத அறிவிப்புகளையும், பயனில்லாத சட்டங்களையும் கண்டும் கேட்டும், இயலாமையில் மனம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறோமே, அது போதாதா? பேசியது போதும், தீர்வுகளைத் தேடுவோம்!
அரசு உடனடியாகச் செய்யக் கூடியவை, செய்ய வேண்டியவை: பள்ளி செல்லும் சிறுமிகளை வக்கிர மனங்கள் கொண்ட ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். சென்னையில் பல பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அரசிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். 'மாணவிகளுக்குத் தனிப் பள்ளிகள்; அதில் ஆசிரியைகள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட வேண்டும்' என்பதே அந்தக் கோரிக்கை. அரசு இதை உடனடியாக, அதாவது வரும் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் நிர்வாகச் சிக்கல் ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஏற்கெனவே ஒரு பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளை மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமித்து ஆண்கள் பள்ளியாகவும், வேறொரு பள்ளியை ஆசிரியைகளை நியமித்து மாணவிகளுக்கும் நடத்தலாம். ஆண்கள் பள்ளியில் தலைமைப் பொறுப்பிலிருந்து கீழ்நிலை வரை ஆண்களே பணியமர்த்தப்பட வேண்டும்; அதே போல் பெண்கள் பள்ளியில் அனைத்து நிலைகளிலும் பெண்களே பணியமர்த்தப்பட வேண்டும்.
Esta historia es de la edición March 14, 2025 de Dinamani Karaikal.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 14, 2025 de Dinamani Karaikal.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சித் தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 320 குறைவு
சென்னையில் தங்கம் விலை கடந்த மார்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியர் கைது
ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரி ஏப். 1 முதல் வாபஸ்: மத்திய அரசு
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
பரஸ்பர புரிதல் மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவில் புதிய உதயம்
பாகிஸ்தான் தூதர் கருத்து
உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
மீண்டும் செயல்படத் தொடங்கியது லண்டன் விமான நிலையம்
தீ விபத்து காரணமாக செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சனிக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
மன்னார்குடியில்...
கர்நாடக மாநில துணை முதல்வர் தமிழக வருகையை எதிர்த்து மன்னார்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டுக் குழுக் கூட்டத்தில் தலைவர்களுக்கு பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வர்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு, புவி சார் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
வலங்கைமானில் இன்று பாடைக்காவடி திருவிழா
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.