பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகருக்கு சுமார் 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் விரைவு ரயில் கடந்த மார்ச் 11-இல் புறப்பட்டது.
பெரோ குன்ரி என்ற இடத்துக்கு அருகே இந்த ரயில் சென்ற தண்டவாளத்தைக் குண்டு வைத்து தகர்த்த பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பயங்கரவாத அமைப்பினர், அந்த ரயிலுக்குள் ஏறி அதைக் கடத்தினர். பயணிகளை மீட்க பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள், 21 பயணிகள் என 58 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர்களில் 214 பயணிகளைக் கொன்றுவிட்டதாக பிஎல்ஏ அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் ராணுவ நிலையின் மீது தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவர் உள்பட தெஹ்ரீக் ஏ தலிபான் அமைப்பினர் 10 பேர் வியாழக்கிழமை (மார்ச் 13) கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவது புதிது அல்ல. இருப்பினும் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் 748 பேர் உயிரிழந்தனர் என்றால், இந்த எண்ணிக்கை 2024-இல் 1,081-ஆக அதிகரித்துள்ளது.
Esta historia es de la edición March 17, 2025 de Dinamani Karaikal.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 17, 2025 de Dinamani Karaikal.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்தனர்.
மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்
மத்திய சட்ட அமைச்சர்
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.
நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..
நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மூவரின் தகுதிநீக்க மனுக்கள் தள்ளுபடி
தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.பி.க்களின் தகுதிநீக்க மனுவை தள்ளுபடி செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார்.
பழைய ஓய்வூதியம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்
நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்
கீழையூர் மற்றும் திருமருகலில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், விடுதலைப் போராட்டத் தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தியாவை வெறுப்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை
உ.பி. முதல்வர் ஆதித்யநாத்
மந்த கதியில் காரைக்கால் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி
அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் காரைக்கால் ரயில் நிலையத்தை பல்வேறு நிலையில் மேம்படுத்துவதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு, ரூ. 5.37 கோடியில் திட்டப்பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டன.