இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர்புரியும் திக்கு விஜயம் நேற்று இரவு நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். கோவிலுக்குள் உள்ள மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல வகை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 7.45 மணி அளவில் முதலாவதாக திருக்கல்யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினார்கள்.
This story is from the May 02, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 02, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது