நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மமரண வழக்கில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகிறது.
கடந்த 2-ந்தேதி மாயமான அவர் 4-ந்தேதி வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டிருந்ததும், உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகில் கடப்பா கல் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. எனவே அவரை மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஜெயக்குமாரின் தொண்டை குழிக்குள் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்கிரப்பர் துகள்கள் இருந்ததாக தகவல்கள் பரவிய நிலையில், அவரது வீட்டின் மாட்டு தொழுவத்தில் அந்த ஸ்கிரப்பரின் கவர் கிடந்துள்ளது. இதனால் அவர் அந்த இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
தடயவியல் பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. எனினும் கொலையாளிகள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டிய முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டவர்களை நேற்று நேரில் வரவழைத்து, தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையை வீடியோ பதிவு செய்து கொண்டதோடு பணம் வரவு-செலவு குறித்த தகவல்களை அவர்கள் கைப்பட கடிதமாக எழுதவைத்து போலீசார் வாங்கி கொண்டனர்.
Esta historia es de la edición May 08, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 08, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது