பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் போது பிரசாரம் முடிவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் தேர்தல் முடிவடைந்த போது அவர் தியானம் மேற்கொண்டார்.
அதேபோல் தற்போதும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அவர் கன்னியாகுமரி யில் கடல் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இன்று முதல் வருகிற ந்தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்கிறார்.
இதற்காக அவர் இன்று வாரணாசியில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக திருவனந்த புரத்திற்கு வருகிறார். அங்கிருந்து பிற்பகல் 3:55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். இங்கு அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் இருந்து தனி படகு மூலமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு முதலில் விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்குள்ள தியான மண்டபத்திற்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார். வருகிற ந்தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்து பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தங்குவ தால் அங்கு மூன்று அறைகள் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது.
This story is from the May 30, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 30, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படை அத்துமீறல்
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்லும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.
ஒரு கிராம் 7 ஆயிரத்தை நெருங்கியது புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.
சனாதன தர்மம் என்பது எளிமையானது: கவர்னர் ஆர்.என்.ரவி
நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பாரதத்தை மிகச் சிறந்த நாடாக உயர்த்தும் நோக்கில் 40 ஆண்டுகளாக இந்திய தர்ம வித்தியா பீடம் செயல்பட்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இலங்கையின் 9வது அதிபராக அனுரா குமார திசநாயகே பதவியேற்றார்
தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
உலக ஓசோன் தின விழா
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இத்தாலி நாட்டில் தேசிய அளவில ஸ்கேட்டிங் போட்டி கும்பகோணம் பள்ளி மாணவன் தேர்வு
ரோலர் ஸ்கேட்டிங் பெடரேசன் ஆப் இந்தியா அமைப்பின் மூலம் பயிற்சி பெற்று பல மாநிலங்கள் மற்றும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கு பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் மேற்படி அமைப் பின் மூலம் ஜோத்பூர் மாநிலத்தில் நடைபெற்ற இத்தாலி நாட்டில் நடக்கும் போட்டிக்கான தேர்வு செய்யப்பட்டனர்.
4 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் ஆம்வே
ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் அதி நவீன மேம்பாடுகளை வழங்கு வதற்கான அறிவியல் திறன்களை வலுப்படுத்து வதற்கு முக்கியத்துவம் அளித்து ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நோக்கமாகக்கொண்ட உலகளாவிய நிறுவனமான ஆம்வே 4 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தனது நான்கு அதி நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களை முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி பிறந்தநாள் பாஜக தலைவர்கள் வாழ்த்து
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிறந்தார்.