நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். கடந்த 4ந்தேதி நீட் முடிவுகள் தேர்வு வெளியிடப்பட்டன. அதன் பிறகு சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.
இந்த நிலையில் நீட் தேர்வில் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்பனை ஆகி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. 6 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வினாத்தாள்களை கசிய விட்டதாக நேற்று 2 பேரை பீகாரில் சி.பி.ஐ.அதிகாரிகள் கைது செய்தனர்.
நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
This story is from the June 28, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 28, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில், பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்
தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்து ஒத்திசைவு கூட்டம்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்து ஒத்திசைவு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில், தேர்தல் செலவின பார்வையாளர் ராகுல் சிங்கானியா, முன்னிலையில் நடைபெற்றது.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
அடையாளம் இல்லாத எங்களை அடையாளப்படுத்தும் வகையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்வர் - புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
\"கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு\" -திருக்குறள் உரிய சுருவி, உற்றகாலம் ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்வறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன் என்ற வள்ளுவத்திற்க்கிணங்க ஏழை எளிய பொதுமக்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களுக்கு தேவையானவற்றை ஆய்ந்தறிந்து உற்ற நேரத்தில் உரிய வகையில் வழங்கிட எண்ணற்றத் திட்டங்கனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள்.
இரா.சம்பந்தன் மறைவு உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ந் தேதி தொடங்கியது.
பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு ஆவண கட்டணத்தை, பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறது.
சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக 5 புதிய அதிநவீன சொகுசு பேருந்து சேவை - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது.
காரைக்கால் மாவட்ட என்சிசி அலுவலகம் சார்பில் வருடாந்திர என்சிசி பயிற்சி முகாம் தொடக்கம்
காரைக்கால் மாவட்ட என் சிசி அலுவலகம் சார்பில் வருடாந்திர என்சிசி பயிற்சி முகாம் நேற்று முறைப்படி தொடங்கியது.
புதுச்சேரி கே.வி.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்க கூடாது - ஒன்றிய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி. கோரிக்கை
புதுச்சேரி கே.வி.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என ஒன்றிய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி.கோரிக்கை விடுத்துள்ளார்.