Depression என்ற வார்த்தையானது 1930களில் பயன்படுத்தத் தொடங்கினாலும், அண்மைக் காலங்களிலேயே இதன் பயன்பாடு அதிகமாக புளக்கத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக, வளர்ந்த நாடுகளில் 70% மக்கள் தொடர்ந்து மன அழுத்தத்துடன் காணப்படுவதாகவும் 90% அதிகமானோர் மாதத்துக்கு பலமுறை மன அழுத்தத்தால் பாதிப்படைவதாகவும் ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.
தற்காலத்தில் மாணவர்களுக்கு அதிகபடியான கல்விச்சுமை, அதிகமான வெளிக்கள செயற்பாடுகள், கற்றலுக்கு போதியளவு பணமின்மை, சரியான உணவின்மை, உரிய நேரத்தில் உறக்கமின்மை போன்ற காரணங்களாலும் பணியாளர்களுக்கு வேலைச்சுமை, வேலைத்தளங்களில் ஏற்படுகின்ற அழுத்தம் போன்றவற்றினாலும் பெரியவர்களுக்கு தம்மோடு மனம் திறந்து உறவாட உறவுகள் இன்மை,ஆழ்மனதின் ஏக்கங்கள் போன்ற பல காரணங்களாலும் மன அழுத்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாறான காரணங்களால், ஒரு நபருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகின்றது. இதனால் பலநோய்த் தொற்றுகளுக்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
மன அழுத்தத்தால் இரத்த ஓட்டம் அதிகமாகும். மனம் திரும்ப பழைய நிலைக்கு வந்துவிட்டால், சரியாகிவிடும். ஆனால், தொடர்ந்து ஒரு நபர் ஒரே விடயத்தாலோ அல்லது ஒரே அளவில் மன அழுத்தத்தில் இருந்தாலோ, மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன அழுத்தத்தால், நாளமில்லா அமைப்பு பாதிக்கப்படும். நாளமில்லா அமைப்பு உடலில் அதிக வேலை செய்கிறது. சிந்தனை, திசுக்களின் செயற்பாடுகள், மெட்டாபாலிஸம் இதனால் பாதிக்கப்படும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகளாக சரியான துக்கமின்மை, கோபம், எரிச்சல் அடைதல், தசைகளில் ஏற்படும் இறுக்க நிலைமை, அதிகமாக உணவுகளை உட்கொள்ளுதல், குறைவாக உண்ணுதல், தலைவலி, எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை, மனச்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல், கவலையான உணர்வு போன்றவற்றை கூறலாம்.
அந்தவகையில், மன அழுத்தம் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
This story is from the July 13, 2023 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 13, 2023 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கொம்புடன் கூடிய மண்டை ஓடு ஏலம்
நாகா இனத்தைச் சேர்ந்த 19ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் புதன்கிழமை (09) ஏலம் விடப்பட்டது.
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை தவறவிடும் வில்லியம்சன்
இலங்கைக்கெதிரான தொடரில் ஏற்பட்ட அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக நியூசிலாந்திலிருந்து கேன் வில்லியம்சன் புறப்படுவது தாமதமாவதன் காரணமாக இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை அவர் தவறவிடவுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.
சகலதுறைவீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பாண்டியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.
பிரேசிலில் எக்ஸ் மீதான தடை நீக்கம்
பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.
பாடசாலையிடம் விளக்கம் கோர தீர்மானம்
தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி உயிர்மாய்த்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட பாடசாலையிடம் விளக்கம் கோர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அமெரிக்க அட்மிரல் இலங்கைக்கு விஜயம்
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பினைப் பலப்படுத்துவதற்காக
பிணை நிபந்தனை உறுதிக்குப்பின் வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை
எம்.ஹொசாந்த் பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால், புதன்கிழமை (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
"சலுகைகளை குறைக்கும் எண்ணமே இல்லை”
\"அரசாங்கத்தினால் முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக நான் அறிந்தேன்.
மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்
எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.