வானிலை ஆய்வாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள், உலக நாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்றவற்றினதும், உலக அளவில் அனைவரினதும் பேசுபொருள் எல்-நினோ (EL - Nino) என்ற காலநிலை தோற்றப்பாடுதான்.
பிறந்திருக்கும் 2024, புது வருடமானது பல்வேறு இயற்கை பேரிடர்கள் மற்றும் அதிகரித்த காலநிலை மாற்றங்களினால் உலகளவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் வருடமாக அமையும் என விஞ்ஞானிகளால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எல்-நினோ, வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பாதிப்புகளை உண்டாக்கும் ஓர் நிகழ்வு ஆகும்.
இவ் எல்-நினோ நிகழ்வால் உலகம் முழுவதும் பரவலாக கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கத் தேசிய கடல்சார் மற்றும் வானிலை ஆராய்ச்சி அமைப்பான National Oceanic and Atmospheric Administration (NOAA) தெரிவித்துள்ளது. பொதுவாகக் குறிப்பிட வேண்டும் என்றால் அதீத மழை, திடீர் புயல், மிதமிஞ்சிய வறட்சி போன்ற பாதிப்புகள் அதிகளவில் ஏற்படலாம்.
எல்-நினோ என்றால் என்ன?
எல்-நினோ (EL- NINO) என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு ஆகும். பசிபிக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்புதான் எல்- நினோ என்று குறிப்பிடப்படுகின்றது.
பசிபிக் கடற்பரப்பு வெப்ப நிலையானது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், அதாவது 7 முதல் 24 மாதங்கள் வரை அதிகமாக்கும் நிகழ்வாகும். அதாவது பசிபிக் சமுத்திரத்தில் பேரு, ஈக்குவடார் கரையோரத்தினை சுற்றியுள்ள கடல் நீரின் வெப்பநிலையானது திடீரென அதிகரித்துச் செல்வதால் வளியமுக்கம் மற்றும் காற்று கோளங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை மூன்று விதமான செயற்பாடுகளை உருவாக்குகின்றது வறட்சி, வெள்ளப்பெருக்கு, கனத்த குளிர்காற்று. இவ்வாறு ஏற்படுத்தப்படுகின்ற தோற்றப்பாடே எல் - நினோ தோற்றப்பாடு எனப்படுகிறது.
This story is from the February 12, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 12, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்
உத்தரப் பிரதேசம் மீரட்டில் ஒரு ஆசிரியை, கடந்த 6 வருடங்களாக அரசு பாடசாலைக்கு வாராமல் இருந்துள்ளார். தனது ஊதியம் மட்டும் தவறாமல் பெற்றவருடன் அதற்கு உதவிய பாடசாலை முதல்வரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு
சர்வதேச கிரிக்கெட் சபையின் 2026ஆம் ஆண்டு இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் முடிவு வரையில் இலங்கையின் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்
கொல்கத்தா நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தன்னார்வலராக பணி புரியும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“வெற்றி நமக்கே”
இஸ்ரேல் இராணுவ வீரர்களிடம் நெதன்யாகு உறுதி
சாகச நிகழ்ச்சியில் ஐவர் உயிரிழப்பு
இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (06) இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், குவாலியூரில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.
சாதனையாளரை சந்தித்தார் ஆளுனர்
ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாகக் கொண்ட Worldide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில், சாதனைபுரிந்த கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயதான நஸ்மி அக்யூலான் பிலால் என்ற மாணவனைக் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
'சந்தாவை நிறுத்து”
மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள சில தொழிற்சங்கங்களுக்கு இதுவரை காலமும் மாதாந்தம் செலுத்தப்பட்டு வந்த சந்தா பணத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவியது
இலங்கையின் சுற்றுலா, வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது.