அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி நாட்டில் சுதந்திரமான தேர்தலுக்கு ஒத்துழைப்பது ஜனாதிபதி என்ற வகையில் தனதும் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய தரப்பினரதும் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (13) கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் எந்த வகையிலும் வன்முறைகளுக்கும் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட நடவடிக்கை மையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கெளரவமாக வரவேற்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போதைப்பொருள் ஒழிப்புக்காக தற்போதுள்ள அனைத்து பொலிஸ், இராணுவ மற்றும் சிவில் நிறுவனங்கனை ஒன்றிணைத்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தனியொரு நிறுவனமாக உருவாக்கி, அதற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படும்.
பாதாள உலகக் குழுகளுக்கோ அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ அனுமதிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனைச் சட்டத்தில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, "நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ இடமளிப்பது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகும் என்தைக் கூற வேண்டும். அதை சட்டத்தில் சேர்க்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்.
This story is from the August 15, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 15, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு கிரிக்கெட் சம்பியன் ரீமாஸ் அணி
புறக்கோட்டை சமூக பொலிஸ் பிரிவும், புறக்கோட்டைமுதலாம் குறுக்குத் தெரு சுய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து மூன்றாவது தடவையாகவும் திங்கட்கிழமை (16) நடத்திய எல்.டபிள்யூ. பெரேரா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் கிண்ணத்தை 28 ஓட்டங்களால் ரீமாஸ் அணி தன் வசப்படுத்தியது.
மோடிக்கு பாலாபிஷேகம்
பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று (செப்., 17) விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுவதால், பா.ஜ., பிரமுகர் ஒருவர் அவரின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் கவுன்சில் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை காரைதீவு விளையாட்டு கழகத்திற்கு வழங்கியுள்ளது.
"தமிழர்கள் முட்டாள்களில்லை"
இலங்கை பொருளாதார ரீதியில் திவாலானமைக்கு தமிழ் மக்கள் மீதான யுத்த செலவீனமும் இனவாதத்தினால் தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் பயன்படுத்தத் தவறியமையுமே காரணம் என்ற உண்மையை ஏற்று சிந்திக்காத செயல்படாத பேரினவாதத் தலைவர்களை நோக்கி நாம் இனியும் வாக்களிக்க முடியாது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் தலைமைக் குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
ஒத்துழைப்பு வழங்க 'பெப்ரல்' தயார்
சுமார் 25 வருடங்களாக இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தும் வகையில், தொடர்ச்சியாகத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் 'பெப்ரல்' அமைப்பு இம்முறையும் ஜனாதிபதித் தேர்தலை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைக்கும் வகையில், நாடு பூராகவும் உள்ள 25 மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மிகச்சிறப்பான ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்துள்ளது.
தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன் கைது
சம்மாந்துறையில் சம்பவம்
முறைப்பாடு செய்யுங்கள்
தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் மோதல்கள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்களை தேர்தல்கள் சிக்கல்களை தீர்க்கும் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.
வினாத்தாளை பகிர்ந்த அறுவர் கைது
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானப்படை விளக்கம்
தேர்தல் பிரசாரத்திற்கு விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து இலங்கை விமானப்படை விளக்கமளித்து ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
பசையை பொலிஸாரின் மீது கொட்டிவிட்டு ஓட்டம்
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக பன்னல - எல்படகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஜனாதிபதி வேட்பாளரின் எலபடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.