![“பெறுவதைக் காட்டிலும், கொடுப்பது மேலானது” “பெறுவதைக் காட்டிலும், கொடுப்பது மேலானது”](https://cdn.magzter.com/1576149266/1725491613/articles/OZdB7hWTV1725510936963/1725511061616.jpg)
அவர் அமரத்துவம் அடைந்த செப்டெம்பர் 5ஆம் திகதியினை ஞாபகார்த்த நாளாகக் கருதி, 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் எடுக்கப்பட்ட A/RES/67/105 தீர்மானப்படி, சர்வதேச தொண்டு தினம் 2013ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
ஐ.நா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகளும், இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டன. 26ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1910ஆம் ஆண்டு அல்பேனியாவின் ஸ்கோப்ஜே கிராமத்தில் (தற்போதுள்ள வட மெசிடோனியக் குடியரசு) பிறந்த அன்னை தெரெசாவின் இயற் பெயர் 'எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ இந்தியாவில் உள்ள கல்கத்தா நகரில் காணப்பட்ட குழந்தைகள், கைவிடப்பட்டோர் மற்றும் தொழுநோயாளிகள் மீது அன்பு காட்டி, அவர்களுக்கு மருத்துவ சேவையாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.
உலகம் முழுவதும் வாழ்ந்த நலிவுற்றவர்களுக்கான உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கப் பவ நாடுகளில் தனது அமைப்பிள் கிளைகளை நிறுவியவர்.
1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை அன்னை தெரேசா பெற்றார். 1980ஆம் அண்டு இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.
அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது. காப்ரியேல் விருது.
அமெரிக்காவின் மிக உயரிய விருதான சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார். இவர் அன்னை தெரேசா அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.
வாழ்ந்த போதே ஒரு மனிதருக்கு அஞ்சவ் தவை வெளியிட்ட முதல் பெருமை 'அன்னை தெரேசா'வுக்கு மட்டுமே உரியது.
தனது 18ஆவது வயதில் தொண்டுப் பணியைக் கல்கத்தாவில் ஆரம்பித்து, சுமார் 45 வருடங்களுக்கு மேலான தன்னலமற்ற தியாகத்துடன் கூடிய சேவையை மக்களுக்கு ஆற்றிய அன்னை தெரேசா, தனது 87ஆவது வயதினில், செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி 1997ஆம் ஆண்டு மண்ணுலகை விட்டு விண்ணுலகம் நோக்கிச் சென்றார்.
2011ஆம் ஆண்டு ஹங்கேரி பாராளுமன்றம் அன்னை தெரெசாவின் இறப்பு தினத்தைத் தேசிய விடுமுறையாக அறிவித்தது.
இவரின் இறப்புக்குப் பின், 2016ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால், அன்னை தெரேசா அவர்கள் முக்தி பேறு அடைந்தவராக அறிவித்து, கொல்கத்தாவின் 'அருளாளர் தெரேசா' என்ற பட்டமும் சூட்டப்பட்டது.
இவ்வாறு பட்டம் சூட்டப்பட்ட இத்தினத்தினை, அல்பேனியா தேசமானது பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியது.
This story is from the September 05, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 05, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/0cpPlW3Kg1739771131423/1739771226266.jpg)
இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு
வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் அமைதி காக்கும் பணிகளை விரைவு படுத்துவதற்காக, இராணுவ மேஜர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து வீரர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அந்தந்த புந்த படைப் பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இராணுவத் தலைமையகம் அனைத்து படைப்பிரிவு கட்டளை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
![“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல" “கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/H9OQxhJAj1739771485764/1739771541828.jpg)
“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"
தனது கல்வித் தகுதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார்.
![தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/3upn1XQp_1739771323043/1739771459674.jpg)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று
2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன
![பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/eLCpAefSm1739770020434/1739770088923.jpg)
பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை
உங்களுக்காகக் கட்டப்படும் வீடுகளுக்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும்
![நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல் நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/nFbreSSuF1739770367988/1739770431901.jpg)
நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்
நாட்டிலுள்ள திறமையான தொழிலாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
![அனைத்தும் எதிரணியின் பிரசாரம் அனைத்தும் எதிரணியின் பிரசாரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/83FquNjpJ1739770283690/1739770366216.jpg)
அனைத்தும் எதிரணியின் பிரசாரம்
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டமை தொடர்பாக பல விமர்சனங்கள் தெரிவிக்கிப்படுகின்றன.
!["தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை” "தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/neYnlq_bj1739770107272/1739770277933.jpg)
"தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
![சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/wsNKCTl7g1739771015867/1739771066725.jpg)
சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
அம்பாறை - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (16) பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
![IMF வுடன் இன்று பேச்சு IMF வுடன் இன்று பேச்சு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/Oe81Ru54O1739769929909/1739770019835.jpg)
IMF வுடன் இன்று பேச்சு
நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும்
![இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/e7AVtoq8A1739771068569/1739771129955.jpg)
இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், இன்று திங்கட்கிழமை (17) காலை, ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.