![வீழ்ந்தோரின் எழுச்சிப் பயணம் வீழ்ந்தோரின் எழுச்சிப் பயணம்](https://cdn.magzter.com/1711457874/1731790699/articles/J8JtUFgqe1731828316454/1731828449267.jpg)
இதனால், தங்கள் குடும்பத்தையும் நிம்மதியையும் தொலைத்துவிட்டு சிறையில் அடைக்கப்படும் கவலைக்குரிய நிலைக்கும் ஆளாவர்.
இருப்பினும், அதன் பிறகு மனந்திருந்தி வரும்போது குடும்பமும் சமூகமும் அரவணைக்கும் கரங்களாக இருக்க வேண்டியது அவசியம்.
அவ்வாறு தங்களின் வாழ்க்கைப் பாதையைச் சீரமைத்துக்கொண்ட நால்வரைச் சந்தித்தது தமிழ் முரசு.
சமையற்கலையால் பிறந்த தெளிவு
சமையற்கலையில் ஆர்வத்துடன் ஈடுபடும் கார்த்திக். -
நான்கு முறை சிறை வாசலை மிதித்தவர் கார்த்திக் மரியோ, 38.
இவர் 15 வயதில் கலவரத்தில் ஈடுபட்டபோது, முதன்முறையாக ‘பாய்ஸ் டவுன்’ இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.
கல்விப் பயணம் தடைப்பட்டதால் கார்த்திக் தேசிய சேவைக்குப்பின் சில்லறை வேலைகளில் இருந்தார். விரைவாகப் பணம் ஈட்ட அவர் குறுக்கு வழி நாடினார். உரிமமின்றி கடன் அளிக்கும் தொழிலில் இறங்கினார்.
“மற்றவர்கள் என்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காகக் குண்டர் கும்பலில் சேர்ந்தேன்,” என்றார் கார்த்திக்.
முன்பு புக்கிட் பாஞ்சாங் கடைத்தொகுதியில் நடந்த கொடூர கலவரத்தில் ஈடுபட்டவர் கார்த்திக். வீட்டில் மூத்த மகனான இவருக்கு இரண்டு தங்கைகள்.
ஒற்றைப் பெற்றோரிடம் வளர்ந்த அவர், தமது பதின்ம வயதில் தங்கைகளைக் கவனித்துக்கொண்டு வீட்டுக்குப் பொறுப்பான மகனாக இருந்தார்.
அப்போது அவர் சமையலில் அதிகம் ஈடுபடத் தொடங்கினார்.
“என் அம்மா என்னைக் கண்டிப்பாக வளர்க்கவில்லை. வழிகாட்ட யாரும் எனக்கு இல்லை. வெளியில் நான் என்ன செய்தாலும் வீட்டில் நான் அதைக் காட்டிக்கொள்ளவில்லை,” என்று கார்த்திக் சொன்னார்.
சிறைக்குச் செல்வதற்கு முன்புதான் கார்த்திக் தற்போது தமக்கு மனைவியாக இருப்பவரைச் சந்தித்தார்.
அப்போது அவருக்கு ‘ஹெச்சிஎஸ்ஏ’ இடைநிலை மறுவாழ்வு இல்லம் மூலம் சமையற்கலைப் பயிற்சி வகுப்புக்குச் செல்ல வாய்ப்பு கிட்டியது.
பயிற்சி வகுப்புக்குப் பிறகு அவருக்குச் சமையல் கலையில் பட்டயம் படிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மனைவி தந்த ஊக்கத்தால் அவர் அதையும் படிக்கத் தொடங்கினார்.
பயிற்சி சமையல் கலை வல்லுநராக இருந்த கார்த்திக், படிப்படியாக இளம் சூஸ் சமையற்கலை (sous chef) வல்லுநர் ஆனார். தற்போது அவர் ஒரு தலைமைச் சமையல் வல்லுநராக உள்ளார்.
Denne historien er fra November 17, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 17, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ் மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/zIaDwLx_v1739675065989/1739675229133.jpg)
மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்
பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் அடுத்தகட்டமாக மூன்று இஸ்ரேலியர்கள் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
![மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/eqv2cUxvM1739674041567/1739674210779.jpg)
மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா
அமெரிக்கா. சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில் இரண்டாவது விமானம் 119 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா திரும்பவிருக்கிறது.
![ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/nm835IeW91739673509637/1739673571946.jpg)
ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு
ஜூரோங் வெஸ்ட்டில் முதல் சைக்கிள் பாலம் திறக்கப்பட்டுள்ளது.
![அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/_ckcdINhr1739672956782/1739673161017.jpg)
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்
நமது செயல்பாடுகளும் சேவைகளும் மின்னிலக்க முறையில் அதிகம் இடம்பெறுவதால் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக நமது பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
தைப்பூசத் திருவிழாவில் தெளிவான நடைமுறைகள் தேவை
சிங்கப்பூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஆகப் பெரிய இந்து சமய விழாக்கள் தைப்பூசமும் தீமிதியும்.
![முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம் முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/M_sBlwJzX1739672845945/1739672956393.jpg)
முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்
இவ்வாண்டின் முழுமைத் தற்காப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, பள்ளிகளுக்கும் துடிப்புடன் மூப்படையும் நிலையங்களுக்கும் உண்பதற்குத் தயாராக உள்ள 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்.
![வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள் வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/uHPVsOLqA1739673741422/1739674038576.jpg)
வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்
பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) வெளியிடவுள்ளார்.
![அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1995711/XkCYpqrUp1739675342328/1739675487684.jpg)
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்
லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் புதிய மரபுடைமை நிலையம், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பிற்பகல் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
வாகனங்களுக்கு வரிவிதிக்க டிரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மோட்டார் வாகனங்களுக்கு ஏப்ரல் 2 வாக்கில் புதிய வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
சாங்கி விமான நிலையச் சிற்றுந்து சேவை ரத்து
சாங்கி விமான நிலையக் குழுமம், அதிகமான பயணிகளைக் கொண்ட குழுவிற்காகச் சோதனை அடிப்படையில் வழங்கப்படும் புதிய சிற்றுந்து சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.