ஆனால், அதைப்பற்றியெல்லாம் எந்த அலட்டலும் காட்டாமல் அடுத்து படம் பண்ணும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் மந்திரமூர்த்தி.
‘‘ஹிட்டாகும்னு நம்பிக்கை இருந்தது. ஆனா, இவ்வளவு தூரம் கொண்டாடுவாங்கனு எதிர்பார்க்கல. இப்படி நல்லதொரு படம் எடுத்திருக்கிறோம்னு சந்தோஷமா இருக்கு. மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். தொடர்ந்து நல்ல படங்கள் எடுக்க முயற்சிப்பேன்...’’ என சாந்தமாக சொல்கிறார் மந்திரமூர்த்தி.
‘அயோத்தி’ எப்படி உருவானது?
எமோஷனல் சப்ஜெக்ட். சமீபத்துல அதிகமா இதுமாதிரி படம் வரல. அதுமாதிரி ஒரு கதை பண்ணலாம்னு முடிவு செய்தேன். வெற்றிமாறன் சார் போன்றவர்கள் எழுத்தாளர்களிடம் கதையை வாங்கி படமெடுக்கிறார்கள். மலையாள இண்டஸ்ட்ரிலயும் எழுத்தாளர்கள்கிட்ட கதையை வாங்கிதான் பெரும்பாலான இயக்குநர்கள் படம் பண்றாங்க. நாமும் ஏன் அப்படி பண்ணக்கூடாதுனு தோணுச்சு.
அப்பதான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சாரோட சந்திப்பு கிடைச்சது. அவரிடம் கதைகள் கேட்டேன். அவர், நிறைய கதைகள் சொன்னார். அதுல ஒண்ணுதான், ‘அயோத்தி’. நான் நினைச்ச எமோஷனல் சப்ஜெக்ட் அதுல இருந்துச்சு. அவர் கதைக்கு ஐடியா மட்டும்தான் கொடுத்தார்.
நான் திரைக்கதை எழுத நிறைய ட்ராவல் செய்தோம். அப்பதான், இறந்த உடலை விமானத்தில் அனுப்ப 7 சர்டிபிக்கேட் தேவை... இதையெல்லாம் வாங்கிய பிறகுதான் இறந்தவர் உடலை விமானத்தில் அனுப்பி வைக்க முடியும்னு தெரிஞ்சுது.
எஸ்.ரா சார் கதையை வாய்மொழியாதான் சொன்னார். அதுக்கு திரைக்கதை பண்ணும் போதுதான் எம்பாமிங், மார்ச்சுவரி, கார்கோ போலீஸ் ஸ்டேஷன், ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் சர்டிபிக்கேட் எல்லாம் தேவைனு தெரிஞ்சது. இதையெல்லாம் வாங்கினபிறகு, இறந்தவர் உடலை சொந்த ஊரு அனுப்பி வைப்பதாகக் கதையைப் பண்ணினோம். இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையா இது விரிந்தது அப்படித்தான்.
உண்மைச் சம்பவத்தைத் தழுவினதா?
Bu hikaye Kungumam dergisinin 19-05-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 19-05-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!