ஆனால், பிரக்ஞானந்தாவை முன்னிலைப்படுத்தி வைஷாலியைக் குறிப்பிடுவது அவரது திறமையை நாம் அவமதிப்பதற்கு சமம்.
ஏனெனில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வைஷாலி பெற்றிருக்கிறார்! ஸ்பெயினில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்ற அவர், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் 2,500 புள்ளிகளுக்குமேல் பெற்று இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார்.
இதன்மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் மூன்றாவது இந்தியப் பெண்எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார்.
இதற்குமுன் கோனேரு ஹம்பியும், ஹரிகா துரோணவல்லியும் இந்தப் பட்டத்தைப் பெற்றிருக்கின்றனர்.
தமிழக அளவிலோ இவர் தான் முதல்! ஆம். தமிழ்நாட்டு அளவில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிதான்.
ஏற்கனவே பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார். இப்பொழுது இவரது சகோதரியான வைஷாலியும் அதே பட்டத்தை வென்றிருக்கிறார். இதனால் உலகிலேயெ கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் அக்கா - தம்பி என்ற பெருமையை இவ்விருவரும் தட்டிச் செல்கின்றனர்
கிராண்ட் மாஸ்டர் பட் டத்தை இன்று வென்றிருக்கும் வைஷாலிக்கு வயது 22. ஆனால், பதினொரு ஆண்டுகளுக்கு முன்பே - அதாவது 2012ம் ஆண்டு-12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் உலக இளைஞர்கள் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வைஷாலி வென்றிருக்கிறார்.
அதேபோல் 2015ம் ஆண்டு, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவிலும் பட்டத்தை வென்றார்.
2021ம் ஆண்டில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
இப்படி வுமன் இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை தனது 15 வயதிலேயே பெற்ற பெருமை வைஷாலிக்கு உண்டு.
தனது 14வது வயதில் மும்பையில் நடந்த தேசிய பெண்கள் சேலஞ்சர்ஸ் போட்டியில் வைஷாலி வெற்றி பெற்றார்.
இளையோர்களுக்கான பல போட்டிகளில் அதற்குமுன் வைஷாலி வெற்றி பெற்றிருந்தாலும், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதுதான் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
இதன்பிறகு சர்வதேச அளவில் அவர் பெற்ற - பெற்று வந்த பட்டங்கள் அனைத்துக்கும் இப்போட்டியே பிள்ளையார் சுழி போட்டது.
Bu hikaye Kungumam dergisinin 22-12-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 22-12-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!