இப்படியொரு நம்பிக்கை இருந்தது. இப்பொழுதல்ல.ஒரு காலத்தில்.
ஆனால், 1980ம் ஆண்டு தொடங்கிய ஈரான் – ஈராக் போர் இந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
அதன் பிறகு சின்னச் சின்னதாக ஒரே மதத்தைச் சேர்ந்த இரு நாடுகளுக்கு இடையே முட்டல் மோதல் யுத்தம் எல்லாம் இந்த 40 ஆண்டுகளில் உலகளவில் நடந்துவிட்டது; நடந்தும் வருகிறது. இது நிற்காது. இனியும் நடக்கும் என சர்வதேச பார்வையாளர்கள் வருத்தத்துடன் கருத்து தெரிவிக்கிறார்கள்.
அதற்கேற்பதான் இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு விஷயம் அரங்கேறத் தொடங்கியுள்ளது.
ஆம். இப்போது ஈரான் பாகிஸ்தான் இடையே சின்னதாக ஒரு முட்டல் மோதல் தொடங்கியிருக்கிறது. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகள், டுரோன்கள் மூலம் ஒன்றையொன்று தாக்கி உலகநாடுகளை பதற்றத்தில் ஆழ்த்த ஆரம்பித்துள்ளன.
மத்திய கிழக்குப்பகுதி ஏற்கெனவே மல்யுத்தகளமாக இருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே காசா பகுதியில் நடந்து வரும் சண்டை 100 நாள்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
இன்னொருபுறம் செங்கடல் வழியாகச் செல்லும் அமெரிக்க, இஸ்ரேல் ஆதரவுக் கப்பல்கள் மீது ஏமன் நாட்டின் ஊத்தி தீவிரவாதிகள் ஏவுகணை, டுரோன் தாக்குதல்களை நடத்த... இதற்கு பதிலடியாக ஊத்தி அமைப்பினரின் தளங்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் கூட்டு விமானப்படைகள் இதுவரை ஆறுமுறை வான் தாக்குதல்களை நடத்தி விட்டன.
இந்தப் பரபரப்புகளுக்கு நடுவில்தான் பாகிஸ்தான் மீது ஏவுகணை, ஆளில்லாடுரோன்களை ஏவி ஈரான் தாக்குதல் தொடுத்திருக்கிறது.
பதிலுக்கு பாகிஸ்தானும், ஈரான் மீது எதிர்த்தாக்குதல் நடத்தியிருக்கிறது.
சரி. பாகிஸ்தானுக்கும், ஈரானுக்கும் இடையில் அப்படி என்னதான் பிரச்னை? ஈரான் நாடு, ஒரு மத்திய கிழக்கு நாடுதான். ஆனால், அது அரபு நாடல்ல ஷியா பிரிவு முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாடு ஈரான்.
ஈரானின் அண்டைநாடான பாகிஸ்தான், கடந்த நாற்பது ஆண்டுகளாக சன்னி முஸ்லீம்களின் செல்வாக்கு மிகுந்த நாடாக உருமாறி வருகிறது. ஈரானுக்கு எதிராக சவுதி அரேபியாவுடன், பாகிஸ்தான் அதிக நெருக்கம் காட்டி வருகிறது.
Bu hikaye Kungumam dergisinin 02-02-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 02-02-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!