
பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார். அந்தக் கடிதம் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது" என கடந்த எட்டாம் தேதி நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரேசுபம் ஞானதேவீராவ் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. அந்த நாளிலிருந்தே 'நான் தான் அடுத்த மேயராக்கும்' என 11 கவுன்சிலர்கள் தங்களுக்கு தெரிந்த அரசியல் லாபிகளை நாடி வருவதுதான் நெல்லையின் புதிய கோலம்.
மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் தி.மு.க.விற்கென 44 கவுன்சிலர்கள், தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் 7 மற்றும் அ.இ.மு.க. கவுன்சிலர்கள் 4 என அங்கம் வகிக்கின்றனர். சரவணன் மேயரான நாள் முதல் ராஜினாமா நாள்வரை தொடர்ந்து கவுன்சிலர்களுக்கும், மேயர் சரவணனுக்குமிடையே ஒத்துழையாமையால் கடந்த 5ம் தேதி மேயர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.
"முன்னாள் மா.செ.வும், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.வும் ஆன அப்துல்வகாப்பின் ஆதரவினால் மேயராக சரவணனும், துணை மேயராக கே.ஆர்.ராஜூவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேயர் இருக்கையின் அதிகாரத்தால், 'இதிலெல்லாம் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?' என்ற ஆச்சர்ய கேள்வியுடன் கிடைத்ததையெல்லாம் சுருட்டத் தொடங்கினார். பணம் இருந்தால்தான் வேலை. பினாயிலுக்குக் கூட கமிஷன் கேட்டார். கட்டிடம் கட்ட கமிஷன் கேட்டார். இதையெல்லாம் நக்கீரன்தானே அம்பலப்படுத்தியது. எங்கள் வார்டில் வேலை பார்க்க வேண்டுமென கவுன்சிலர்கள் கூறினாலும், 'பணத்தைக் கொடுப்பா... வேலை நடக்கும்' என கவுன்சிலர்களிடமே கமிஷன் கேட்டது இவராகத்தான் இருக்க முடியும்.
மா.செ. அப்துல்வகாப் கண்டிக்க, 'மேயரின் அதிகாரத்தில் தலையிடுகின்றார் மா.செ.' என மேயர் பிட்டைப் போட.. மா.செ. பதவி பறிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் மா.பொறுப்பாளர் ஆனார். மேயரின் ஆட்டம் அதிகமானது. அதன்பின் கவுன்சிலர்களிடம் மோதல் அதிகரிக்கவே, கவுன்சிலர்கள் படையெடுத்து தலைமைக்கு சென்று புகார் மனு அளித்தனர். அமைச்சர் நேருவும் கண்டித்துப் பார்த்தார், அடங்கவில்லை. வேறு வழியின்றி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்" என்கிறார் பாலபாக்கியம் நகரைச் சேர்ந்த சோனைழுத்து.
Bu hikaye Nakkheeran dergisinin July 31 - August 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin July 31 - August 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

ஏன் தந்தை பெரியார் முக்கியமான தலைவர்?
இவையெல்லாம் உரிமைகளாக பெற்றவை என்பதைக்கூட அறிய முடியாத அளவுக்கு நாம் வசதியாக வாழும் இந்த வாழ்வு, சமூகம், நமக்கான சட்ட பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், வழிபாடுகள் போன்றவை யாவும் நமக்கிருந்திராத காலத்தை கற்பனை செய்து பாருங்கள்.

த.வெ.க தனித்துப் போட்டி! குழப்பும் பிரசாந்த் கிஷோர்!
பிரஷாந்த் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டி த.வெ.க. வட்டாரத்தை கதிகலங்கச் செய்துள்ளது.

மாணவி தற்கொலை! மூடிமறைக்கும ஆசிரமம்!
பெரிய கல்வி நிறுவனங்கள், குழந்தைகள் விடுதிகள், ஆசிரமங்களில் பெண் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்தால், தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாதென்பதற்காக விசாரணை அதிகாரிகளுக்கு பணத்தைக்கொடுத்து சரிக்கட்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

தலைவர்களின் பலமும் பலவீனமும்!
தனி நபருக்கானாலும், கட்சிகளுக்கானாலும், ஆட்சிகளுக்கானாலும், ஒரு சமூகத்துக்கானாலும் மிகவும் ஜாக்கிரதையாகக் கண்காணிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும். இதை அண்ணா இப்படிச் சொன்னார்....

முதல்வர் கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ம.க.! அதிர்ச்சியில் டெல்லி!
ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72ஆவது பிறந்த நாள், அனைத்துத் தரப்பாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.\"

போக்ஸோ வழக்கில், ஐக்கியைப் பற்றி பெசக்கூடாது! - மிரட்டிய போலீஸார்
'போக்ஸோ வழக்கின் எப்.ஐ.ஆர். நகல் தருகின்றோம். வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என அழைத்து, 'ஜக்கியைப் பற்றி, ஈஷாவைப் பற்றி எதுவும் பேசக்கூடாதென' பாதிக்கப்பட்டோரை மிரட்டி எழுதி வாங்கி அனுப்பியிருக்கின்றது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம். சரி... எப்.ஐ.ஆர். நகலாவது தந்தார்களா, என்றால் அதுவும் இல்லை.

3வது உலகப் போர் மூளுமா?
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுவார்த்தை காரசார விவாதமானதால், சர்வதேச அளவில் பதட்டம் கிளம்பியுள்ளது!

மஜா மசாஜ் சென்டர்கள்!-குமரி எஸ்.பி.தடாலடி!
நிர்வாண மசாஜ், விபச்சாரம், சூதாட்டம், மிரட்டல் என காவல்துறை உயர் அதிகாரிகள் ஆசியுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டானாக வலம் வந்துகொண்டிருந்த நாகர்கோவில் விஜய்ஆனந்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது குமரி காவல்துறை.

கலெக்டர் அதிரடி! பதறும் அதிகாரிகள்!
கடந்த மாதம் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் 29வது கலெக்டராக சரவணன் பொறுப்பேற்ற வுடனே மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளுக்கும் அதிரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கோரிக்கைகளைக் கேட்டது மட்டு மல்லாமல், பல்வேறு துறைகளுக்கு சென்று விசிட்டடித்து, ஆய்வு செய்து நலத்திட்டப் பணிகளையும் பார்வை யிட்டு, சரியாக செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு டோஸ் விட்டிருக் கிறார்.

நான் யார் தெரியுமா? அலுவலர்களை மிரட்டும் பெண்மணி!
திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள் உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமியின் அலுவலகத்தில், பெங்களுரூவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமர்ந்துகொண்டு அரசு ஊழியர்களை மிரட்டுவ தாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.