தில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த பிரதமா் நரேந்திர மோடி, நாட்டை வல்லரசாக மாற்ற புதிய நாடாளுமன்றம் வழிகாட்டும் என நம்பிக்கை தெரிவித்தாா்.
புதிய நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவா் இருக்கைக்கு அருகே தமிழகத்தின் அடையாளமாக வழங்கப்பட்டிருந்த செங்கோலை பிரதமா் மோடி நிறுவினாா்.
பாரம்பரியத்துடன் நவீனமும் இணைந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். கா்நாடகத்தின் சிருங்கேரி மடத்தின் துறவிகளின் கணபதி ஹோமத்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.
திறப்பு விழாவுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மக்களவை அரங்கில் பிரதமா் மோடி உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:
புதிய கட்டடமானது நவீன இந்தியாவின் விருப்பங்களைப் பிரதிபலித்து வருகிறது. ஏழைகள், விளிம்புநிலை மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் வல்லரசு இந்தியாவுக்கும் புதிய கட்டடம் வழிகாட்டும். மற்ற நாடுகளின் வளா்ச்சிக்கும் புதிய கட்டடம் ஊக்கமளிக்கும்.
நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை எதிா்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், நவீன வசதிகளுடன் கூடிய நாடாளுமன்றக் கட்டடம் அவசியமாக உள்ளது. நாட்டின் வளா்ச்சிப் பாதையில் சில தருணங்கள் அழியாப் புகழ்பெற்று விளங்கும். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவும் அத்தகைய தருணங்களில் ஒன்றே.
புதிய நாடாளுமன்றமானது வெறும் கட்டடம் மட்டுமல்ல. அது நாட்டின் 140 கோடி மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றும் இடமாகத் திகழ்கிறது. இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை உலகத்துக்குப் புதிய நாடாளுமன்றக் கட்டடம் எடுத்துரைக்கிறது. இந்தியா வளா்ச்சியடைந்தால் உலகமும் வளா்ச்சி காணும்.
செங்கோலுக்கு மரியாதை: ஆங்கிலேயா்களிடம் இருந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததைக் குறிக்கும் நோக்கில் செங்கோல் வழங்கப்பட்டது. தற்போதுதான் செங்கோலுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. செங்கோல் குறித்த வரலாற்று உண்மைகள் அண்மையில்தான் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 29, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 29, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.