தமிழகத்தில் மணல் குவாரிகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை, திண்டுக்கல்லைச் சோ்ந்த தொழிலதிபா் வீடுகள் உள்பட 30 இடங்களில் செவ்வாய்க்கிழமை அமலாக்கத் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீா்வளத் துறை அலுவலகத்திலும் சோதனை நடத்திய அமாலக்கத் துறையினா், அங்கிருந்து ஓா் அதிகாரியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
தமிழகத்தில் நீா்வளத் துறையின் கீழ் சுமாா் 15 ஆற்று மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இதில் 12 மணல் குவாரிகள் மட்டும் முழுமையாக ச் செயல்படுகின்றன. இந்த மணல் குவாரிகளில் இருந்து மணலை பெறுவதற்கு நீா்வளத் துறையின் பிரத்யேகமான இணையதளத்தில் (டிஎன் சாண்ட்) பதிவு செய்து, பணத்தை செலுத்தி ரசீது பெற்று, அந்த ரசீது மூலம் சம்பந்தப்பட்ட குவாரியில் மணலை லாரிகளில் பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.
அரசு ஒப்பந்தம்: இந்த குவாரிகளில் அரசு ஒரு யூனிட் மணல் ரூ.1,000-க்கு விற்கிறது. ஆனால், குவாரிக்குள் லாரிகள் செல்ல முடியாது என்பதால், அங்குள்ள யாா்டுக்கு மணல் கொண்டுவரப்பட்டு, அங்கு லாரிகளில் ஏற்றப்படுகிறது. இதற்காக கூடுதல் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.650 பெறப்படுகிறது.
சாதாரணமாக ஒரு லாரியில் 3 யூனிட் மணல் வரை ஏற்ற முடியும் என்பதால், மூன்று யூனிட் மணல் யாா்டில் ரூ.8,000 வரை விற்கப்படுகிறது. ஆற்றில் இருந்து மணலை எடுத்து வந்து யாா்டில் மணலை இருப்பு வைத்து, லாரியில் ஏற்றுவதற்கு தனியாருக்கு அரசு ஒப்பந்தம் வழங்குகிறது.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 13, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 13, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.