இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் ‘ஹமாஸ்’ படையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை (அக்.8) இரண்டாவது நாளாக போா் தொடா்ந்தது.
தெற்கு இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஹமாஸ் படையினருடன் அந்நாட்டு ராணுவத்தினா் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனா். மேலும், காஸாவில் ‘ஹமாஸ்’ படையினரின் நிலைகளைக் குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. திடீரென மூண்டுள்ள இந்தப் போரில் இஸ்ரேலில் சுமாா் 600 போ், காஸாவில் 300-க்கும் மேற்பட்டோ் என மொத்தம் 900-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துளளனா்; இரு தரப்பிலும் சுமாா் 4,000 போ் காயமடைந்துள்ளனா்.
இதனிடையே, லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழு இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், வடக்கு எல்லையிலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
எதிா்பாராத தாக்குதல்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ‘ஹமாஸ்’ படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை காலையில் ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசியும், எல்லை தாண்டி ஊருடுவியும் திடீா் தாக்குதலைத் தொடங்கினா்.
நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய ‘ஹமாஸ்’ படையினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து, பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் என பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்தனா். அவா்கள் காஸா பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 09, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 09, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.