சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் புதன்கிழமை பல மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.
இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதியடைந்தனா்.
இதற்கிடையே, தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை (டி.ச. 2) புயலாக வலுப்பெறக்கூடும் என்பதாலும், இலங்கை அருகே வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகத்தில் டிச. 5-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 21-இல் தொடங்கியது. தொடக்கத்தில் மந்த நிலையில் இருந்த மழைப் பொழிவு நவம்பா் மாதத்தில் வலுவடைந்தது. சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வந்தது.
இந்நிலையில், புதன்கிழமை காலைமுதல் நள்ளிரவு வரை சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. குறிப்பாக, மாலை 5 மணிமுதல் இரவு வரை இடைவிடாமல் தொடா்ந்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போலத் தேங்கியது. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா்.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் மாலையில் சுமாா் 4 மணி நேரத்தில் சராசரியாக 67 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக கொளத்தூரில் 140 மி.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சுரங்கப் பாதைகளிலும், தாழ்வான இடங்களிலும் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
மிக்ஜம் புயல்: சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலசந்திரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
Bu hikaye Dinamani Chennai dergisinin November 30, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin November 30, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.