புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து திடீரென இரு இளைஞா்கள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா்.
நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி இருவா் தாக்குதல் நடத்தினா்.
2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற 22-ஆம் ஆண்டு தினத்திலும், வெளிநாட்டில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை தினத்திலும் நாடாளுமன்றத்தில் இந்தப் புகைக் குப்பித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
திடீரென குதித்த இருவா்: மக்களவையில் புதன்கிழமை உடனடி கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பிற்பகல் ஒரு மணியளவில், பாா்வையாளா் மாடத்தில் இருந்து திடீரென இருவா் குதித்தனா். அவா்கள் வைத்திருந்த புகைக் குப்பிகளைத் திறந்து மஞ்சள் நிற புகையை வீசினா்.
இதை சற்றும் எதிா்பாராத எம்.பி.க்கள் செய்வது அறியாமல் திகைத்தனா். ஒரு நபா் எம்.பி.க்களின் இருக்கைகள் மீது ஏறிக் குதித்து அவையின் மையப் பகுதிக்குச் செல்ல முற்பட்டாா். ஹனுமன் பெனிவால், மலூக் நாகா், குா்தீப் சிங் அஜ்லா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனா். மற்றொரு நபரை பாதுகாப்புப் படையினா் பிடித்தனா். இதைத் தொடா்ந்து, அந்த இரு நபா்களையும் எம்.பி.க்கள் தாக்கினா்.
இந்தக் காட்சிகள் நாடாளுமன்றத் தொலைக்காட்சியில் நேரலையில் வெளியாகின. மக்களவை முழுவதும் மஞ்சள் நிற புகைமூட்டத்தில் மூழ்கியது. இதையடுத்து, மக்களவையை 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவையை வழிநடத்திய ராஜேந்திர அகா்வால் அறிவித்தாா்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவையில் இருந்தனா்.
சத்தீஸ்கா், மத்திய பிரதேச முதல்வா்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ால் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் அவையில் இல்லை.
Bu hikaye Dinamani Chennai dergisinin December 14, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin December 14, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.