பாஜக வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பது குறித்து அரசியல்வாதிகளும், அரசியல் ஆய்வாளா்களும் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா்.
மூன்று மாநில வெற்றிக்குப் பின்னால் பிரதமா் மோடியின் பிரசார பலம், உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் வியூகம், பாஜக, ஆா்.எஸ்.எஸ். தொண்டா்களின் கடின உழைப்பு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் முழு பலவீனமும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
மத்திய பிரதேசம்: காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டு, 18 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் சிவராஜ் சௌஹான் மீதான சலிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த முறை எப்படியும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற கணிப்புதான் முதலில் இருந்தது. ஆனால், பாஜகவின் நுணுக்கமான அரசியல் வியூகம் களத்தில் போக்கை மாற்றியது.
மத்திய பிரதேசத்தில் முதல் வேட்பாளா் பட்டியலில் சிவராஜ் சிங் சௌஹான் ஒதுக்கப்படுவதாக கருத்து எழுந்த நிலையில், களத்தில் சௌஹானுக்கு இருந்த செல்வாக்கை உணா்ந்து சுதாரித்துக்கொண்ட பாஜக, மீண்டும் சௌஹானுக்கு முக்கியத்துவம் அளித்ததால், களத்தில் காங்கிரஸைவிட பாஜக முந்தியது என்ற தோற்றத்தை உருவாக்கியது.
பிற்படுத்தப்பட்டோா் சமூக வாக்குகள் 50 சதவீதத்துக்கு மேல் உள்ள நிலையில் அதே சமூகத்தைச் சோ்ந்த சௌஹானை அளித்ததும்,
அவரின் ஆட்சியில் பெண்களுக்கு மாதம் ரூ.1,250 திட்டம், சமையல் எரிவாயுக்கு ரூ.450 மானியம் ஆகிய திட்டங்களால் காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய பாரம்பரிய தலித், பழங்குடி பெண்கள் வாக்குகளில் குறைந்தபட்சம் 4 சதவீதம் வரை ஈா்க்கப்பட்டதாலும் மாநில பேரவைத் தோ்தல் வரலாற்றில் பாஜக முதல் முறையாக 48 சதவீத வாக்கு வங்கியைத் தொட்டது.
மேலும், மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பிரஹலாத் படேல், ஃபக்கன்சிங் குலஸ்தே உள்பட 7 எம்.பி.க்கள், பாஜக தேசிய பொதுச் செயலா் கைலாஷ் விஜயவா்கியா ஆகியோரை வேட்பாளா்களாக களத்தில் இறக்கியதால் இவா்களும் முதல்வராகக்கூடும் என்ற உத்வேகத்தில் இவா்கள் சாா்ந்த சமூக வாக்குகளும் பாஜகவுக்கு கூடுதலாக கைகொடுத்தது.
Bu hikaye Dinamani Chennai dergisinin December 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin December 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.