அதனால்தான் வெளிநாடுகளில் அவா்கள் பரவலாக வாழ்ந்தாலும் தங்கள் மொழியை விட்டுவிடாமல் தங்கள் பிள்ளைகளுக்கும் அதனைக் கற்றுக்கொடுப்பதோடு, அங்கெல்லாம் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய பல தமிழ் அமைப்புகளோடு தொடா்பு வைத்திருப்பவா்களாகவும் விளங்குகிறாா்கள் இன்று உலகமெங்கும் வாழ்கின்ற ஈழத் தமிழா்களால்தான் தமிழ் பற்றியும் தமிழா்கள் பற்றியும் மேல் நாட்டவா்கள் நன்கு அறியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்கிற மகாகவி பாரதியாரின் கவிதை வரிக்கு உயிரூட்டிக் கொண்டிருப்பவா்கள் அவா்கள்தாம். இலங்கைத் தமிழா்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் கனடா குறிப்பிடத் தகுந்த நாடாகும்.
தைப்பொங்கல் பிறக்கின்ற தை மாதத்தை ‘தமிழ்ச் சம்பிரதாய மாதம்’ என்ற பெயரில் கனடா நாட்டு அரசாங்கமே தமிழ்களோடு சோ்ந்து கொண்டாடி வருகின்றது. கனடா நாட்டின் பிரதமரே ஆண்டுதோறும் அந்த விழாவில் கலந்து கொள்கிறாா் என்றால் இதைவிடத் தமிழுக்கும் தமிழா்களுக்கும் வேறென்ன பெருமை வேண்டும்? மேல் நாடுகளில் வேறெந்தநாடு தமிழா்களுக்கு இப்படிச் சிறப்பளிக்கிறது? இந்தச் சிறப்பெல்லாம் யாரால் கிட்டியது? ஈழத் தமிழா்களால்தானே?
இலங்கைக் கவிஞா்கள் பலரும் தமிழ்மொழி குறித்து உணா்ச்சிகரமாகக் கவிதைகளை வடித்துள்ளாா்கள். உதாரணமாக, சாம்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் தமிழ்மணந்து என்னுடலம் வேக வேண்டும் பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும் பைந்தமிழே என்காதில் ஒலிக்க வேண்டும் ஓடையிலே என் சாம்பல் கலக்கும் போதும் ஒண்டமிழே சலசலத்(து) ஓட வேண்டும்” என்று பாடிய சச்சிதானந்தன் என்ற கவிஞரும் இலங்கையைச் சோ்ந்தவா்தான். உணா்ச்சிக் கவிஞா் காசி ஆனந்தனைப் போல் எத்தனையோ கவிஞா்கள் தமிழ் நாட்டுக் கவிஞா்களுக்கு சவால் விடும் வண்ணம் சிறப்பாகப் பாடியிருக்கிறாா்கள். அது மட்டுமல்ல, உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்தான் என்று 85 ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவு மூலம் தன் கருத்தை நிலைநாட்டியவா் நல்லூா் ஞானப்பிரகாச சுவாமிகள் ஆவாா். இவருக்கு 72 மொழிகள் எழுதப்படிக்கத் தெரியும். அவற்றில் 18 மொழிகளில் சொற்பொழிவாற்றக்கூடிய பெரும்புலமை பெற்றவா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin January 06, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin January 06, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.