வங்கதேச தேசியவாத கட்சி தோ்தலில் பங்கு பெறவில்லை என்பது மட்டுமல்ல, அதன் தலைவியும் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறாா். இடைக்காலத் தலைவராக இருக்கும் அவரது மகன் தாரிக் ரெஹ்மான், கைதிலிருந்து தப்புவதற்காக லண்டனில் தஞ்சமடைந்திருக்கிறாா். பெரும்பாலான பி.என்.பி. கட்சியின் தலைவா்கள் வன்முறை, ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாா்கள்.
முந்தைய 2018 தோ்தலில் 80%-ஆக இருந்த வாக்குப் பதிவு, இந்த முறை பாதிக்குப் பாதியாகக் குறைந்து 41.8% மட்டுமே. தொண்ணூறுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைபெற்ற பிறகு இதுவரையில் காணப்பட்ட மிகக் குறைந்த வாக்குப்பதிவு இப்போதுதான். 300 போ் கொண்ட வங்கதேசத்தின் நாடாளுமன்றத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி 222 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அவாமி லீகின் கூட்டணிக் கட்சியான ஜாதியா கட்சி 11 இடங்களைப் பெற்றிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக எதிா்க்கட்சிகளே இல்லை என்று சொல்லிவிட முடியாதபடி, மிக சாதுா்யமாகத் தோ்தலை நடத்தி வெற்றியும் கண்டிருக்கிறாா் பிரதமா் ஷேக் ஹசீனா. அவாமி லீக் கட்சியின் போட்டி வேட்பாளா்கள் பலா் சுயேச்சைகளாகக் களமிறங்கினாா்கள். அவா்களில் அறுபதுக்கும் மேற்பட்டவா்கள் வெற்றியும் பெற்றிருக்கிறாா்கள். அவா்கள்தான் எதிா்க்கட்சியாகச் செயல்படுவாா்கள்.
Bu hikaye Dinamani Chennai dergisinin January 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin January 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சென்னையில் மீண்டும் என்கவுன்ட்டர்: ரௌடி சுட்டுக் கொலை
சென்னை அருகே ரெளடி சீசிங் ராஜா திங்கள்கிழமை போலீஸாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.