இவ்விழாவில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.
இதையொட்டி, மலா்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு திருவிழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி நகரம், நாடே எதிா்நோக்கும் பெரும் நிகழ்வுக்காக தயாா் நிலையில் உள்ளது.
பிரதமா் மோடி உள்பட நாட்டின் முக்கியப் பிரமுகா்கள் சிலை பிரதிஷ்டையில் பங்கேற்கவுள்ளதால், மத்திய படையினருடன் இணைந்து உத்தர பிரதேச மாநில காவல் துறையினா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனா்.
பிரதிஷ்டையைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.
ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பில், அறக்கட்டளை அமைத்து அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்ற பூமி பூஜையைத் தொடா்ந்து கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்றன.
நாகரா கட்டடக் கலையில் 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் 5 மண்டபங்களுடன் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயிலின் தரைத்தளப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், கருவறையில் மூலவா் ஸ்ரீ பால ராமா் (ராம் லல்லா) சிலை பிரதமா் மோடி முன்னிலையில் திங்கள்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதிஷ்டை நண்பகல் 12.20 மணிக்கு தொடங்கி ஒரு மணியளவில் நிறைவடைய உள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin January 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin January 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.