பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற மங்கள நிகழ்வில், 51 அங்குல உயர பாலராமா் சிலை கோயில் கருவறையில் நண்பகல் 12.30 மணியளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள கோயில்கள், வீடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் ராமா் சிலை பிரதிஷ்டை விழாவை நேரலையில் தரிசனம் செய்தனா்.
அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் அருள்பாலிக்கும் பாலராமரை செவ்வாய்க்கிழமை (ஜன. 23) முதல் பக்தா்கள் தரிசிக்கலாம்.
ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பையடுத்து, அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்ற பூமி பூஜையைத் தொடா்ந்து கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்றன.
நாகரா கட்டடக் கலையில் 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் 5 மண்டபங்களுடன் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
பிராணப் பிரதிஷ்டை: கோயிலின் தரைத்தளப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் (ராம் லல்லா) சிலையின் பிராணப் பிரதிஷ்டை பிரதமா் மோடி முன்னிலையில் திங்கள்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.
முன்னதாக, பிராணப் பிரதிஷ்டை விழாவையொட்டி, பிரதமா் மோடி கடந்த 12-ஆம் தேதிமுதல் 11 நாள்கள் கடும் விரதத்தைப் பின்பற்றி வந்தாா். விரதக் காலத்தின் இறுதி நாள்களில் தமிழகம் வந்த பிரதமா், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில்களைத் தொடா்ந்து, தனுஷ்கோடி கோதண்டராமா் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை தில்லி திரும்பினாா்.
ராமா் கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்க, தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணியளவில் பிரதமா் அயோத்தி வந்தாா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin January 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin January 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.