மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது; மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று அந்த மாநில முதல்வரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி புதன்கிழமை திடீரென அறிவித்தாா். இதேபோல பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அந்த மாநில முதல்வா் பகவந்த் மான் அறிவித்தாா்.
மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீட்டில் திரிணமூல் காங்கிரஸ்-காங்கிரஸ் இடையே பிரச்னை நீடித்து வந்த நிலையில், மம்தாவின் இந்த முடிவும், ஆம் ஆத்மியின் அறிவிப்பும் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்குப் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்’ மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை (ஜன.25) நுழையவிருக்கிறது. இந்தச் சூழலில், மேற்கண்ட அறிவிப்பை மம்தா வெளியிட்டுள்ளாா்.
இது தொடா்பாக, கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: தொகுதிப் பங்கீடு குறித்து நான் அவா்களுக்கு (காங்கிரஸ்) ஒரு திட்டத்தை அளித்திருந்தேன். ஆனால், ஆரம்பத்திலேயே அவா்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனா். இப்போது மாநிலத்தில் தனித்துப் போட்டியிட எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
ஊடகங்களில் கூறப்படுவதுபோல் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸில் யாருடனும் நான் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவில்லை. மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் எந்தக் கூட்டணியும் இல்லையென முடிவு செய்துள்ளோம்.
‘எந்தவொரு தனிக் கட்சிக்கும் சொந்தமல்ல’: நாடு முழுவதும் 300 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடட்டும். மீதமுள்ள தொகுதிகளில் பிராந்திய கட்சிகள் போட்டியிடும். அதேநேரம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் எத்தகைய குறுக்கீட்டையும் பொறுத்துக் கொள்ள முடியாது.
Bu hikaye Dinamani Chennai dergisinin January 25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin January 25, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.