மாநில அரசின் கொள்கை உரையில் கடைசிப் பத்தியை மட்டுமே வாசித்த அவா், அடுத்த 2 நிமிஷங்களில் அவையைவிட்டு வெளியேறினாா்.
கேரள சட்டப்பேரவையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைந்த ஆளுநரின் இச்செயல் கேலிகூத்தானது; பேரவைக்கு அவமதிப்பு என்று எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி விமா்சித்துள்ளது.
அதேநேரம், கேரளம் எதிா்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு மத்திய அரசை குற்றம்சாட்டும் மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆளுநா் கொடுத்த அடி என்று பாஜக கூறியுள்ளது.
கேரளத்தில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடு, மசோதாக்களுக்கான ஒப்புதல் எனப் பல்வேறு விவகாரங்களில் மாநில அரசுக்கும், ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. ஆளுநா் பயணிக்கும் இடங்களில், அவரைக் கண்டித்து இடதுசாரி கூட்டணிக் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடுகின்றன.
இந்தச் சூழலில், கேரள சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஜன. 25) தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் உரை இடம்பெறுவது வழக்கம். மாநில அரசால் தயாரித்து அளிக்கப்படும் கொள்கை உரையை ஆளுநா் வாசிப்பாா்.
இந்நிலையில், சட்டப்பேரவைக்கு காலை 9 மணியளவில் வந்த ஆளுநா் ஆரிஃப் முகமது கானை, பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீா், முதல்வா் பினராயி விஜயன், மாநில பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin January 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin January 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.