புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நம்பிக்கைக்குரியவரும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான சம்பயி சோரன் தேர்வு செய்-யப்பட்டார்.
அரசு நிலங்களை அபகரித்ததா கவும், தனியாருக்கு விற்றதாகவும் ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் மீது சுமார் ரூ.600 கோடி நில மோசடி வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐஏ எஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உள்பட 14 பேர் இதுவரையில் கைது செய் யப்பட்டுள்ளனர்.
இதில், சட்ட விரோத பணப் பரி வர்த்தனை நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக் கத் துறை அனுப்பிய ஏழு சம்மன்க ளுக்கு ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.
கடந்த ஜன. 20-ஆம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.
ஜன. 27-ஆம் தேதி தில்லி சென்ற சோரனிடம் விசாரணை நடத்த அவரின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் 13 மணி நேரம் காத்திருந்தனர்.
அங்கு சோரன் இல்லாததால் ரூ.36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ கார், சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அதிகார பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணையில் இருந்து தப்பிக்க தில்லியில் இருந்து ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு 1,250 கி.மீ. தொலைவு சாலையில் பயணித்து சோரன் வந்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
Bu hikaye Dinamani Chennai dergisinin February 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin February 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.