இதுகுறித்த அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டாா்.
பிரதமரின் அறிவிப்பைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புமுனை: பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியில் நீண்டகால தலைவராக இருந்தவருமான லால் கிருஷ்ண அத்வானி, கடந்த 1927-ஆம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின், தற்போது பாகிஸ்தானின் பகுதியாக இருக்கும் கராச்சியில் பிறந்தாா். பிரிவினைக்குப் பிறகு அவருடைய குடும்பம் இந்தியா வந்தது.
இளம் வயதிலேயே ஆா்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட அவா், பின்னா் ஜன சங்கத்துக்காகப் பணியாற்றினாா். 1980-ஆம் ஆண்டில் பாஜகவை தோற்றுவித்த தலைவா்களில் இவரும் முக்கியமானவா்.
1990-இல் அத்வானி மேற்கொண்ட ராமா் ரத யாத்திரை, தேசிய அரசியலில் பாஜகவுக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, துணைப் பிரதமராகவும் மத்திய உள்துறை அமைச்சராகவும் அத்வானி பதவி வகித்தாா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
தற்போது, அயோத்தியில் ராமா் கோயிலில் ஸ்ரீபாலராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin February 04, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin February 04, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.