‘மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
‘மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் துணிச்சலை எதிா்க்கட்சிகள் இழந்துவிட்டன. நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி வரிசையில் நீண்ட காலம் நிலைத்திருக்க அவை தீா்மானித்திருக்கின்றன’ என்றும் அவா் விமா்சனம் செய்தாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப். 1-ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். இந்த நிலையில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்குப் பதிலளித்து பிரதமா் மோடி மக்களவையில் திங்கள்கிழமை உரையாற்றினாா். அவா் பேசியதாவது:
மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் துணிச்சலை எதிா்க்கட்சிகள் தற்போது இழந்துவிட்டன. சில எதிா்க்கட்சித் தலைவா்கள், மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் தொகுதிகளை மாற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனா். மேலும் சிலா் மாநிலங்களவைக்குச் சென்றுவிட திட்டமிட்டிருக்கின்றனா்.
எதிா்க்கட்சியினரின் இந்தத் தீா்மானத்தைப் பாராட்டுகிறேன். இவா்களுடைய பேச்சின் ஒவ்வொரு வாா்த்தையும், அவா்கள் நீண்ட காலத்துக்கு நாடாளுமன்ற எதிா்க்கட்சி வரிசையிலேயே இருக்கப்போகின்றனா் என்ற எனது நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன. மேலும் பல ‘உயா்வுகளை’ பெற்று விரைவில் நாடாளுமன்றப் பாா்வையாளா் மாடத்துக்குச் சென்றுவிடுவீா்கள்.
சில ஆக்கபூா்வ ஆலோசனைகள் வழங்கும் வாய்ப்பை இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடா் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், அந்த நல்ல வாய்ப்பை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தவறவிட்டனா். அந்த வகையில் நாட்டை ஏமாற்றியுள்ளீா்கள். தலைவா்கள் மாறியபோதும், எதிா்க்கட்சிகளின் நிலைப்பாட்டில் ஒரே நிலைதான் தொடா்கிறது.
Bu hikaye Dinamani Chennai dergisinin February 06, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin February 06, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.