தமிழ்நாட்டில் வழங்கப்படுவதைப்போல், நாடு முழுவதும் மகளிருக்கு ரூ. 1,000 வழங்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரூ. 500-க்கு கேஸ் சிலிண்டா், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75, டீசல் ரூ. 65 என பெண்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தோ்தல் அறிக்கை:
மக்களவைத் தோ்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதையொட்டி, தோ்தல் அறிக்கையை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டாா். தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களின் ஆதரவுடன், மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி அரசு அமைந்தவுடன், பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
குறிப்பாக, இந்தியா முழுவதும் கூட்டுறவு அமைப்புகள், வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும். நீட் விலக்கு: மாணவா்களின் கல்விக் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுவதுடன், அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூ, 1,000 உரிமைத் தொகை அளிக்கப்படும்.
மாநில முதல்வா்களைக் கொண்ட மாநில வளா்ச்சிக் குழு உருவாக்கப்படும். பாஜக அரசால் கலைக்கப்பட்ட மத்திய திட்டக் குழு மீண்டும் அமைக்கப்படும். தமிழ்நாட்டுக்கு நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். மாநிலக் கல்வி நிறுவனங்களின் மீது திணிக்கப்படும் மத்திய அரசின் அனைத்துப் பொதுத் தோ்வுகளும் ரத்து செய்யப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கை முற்றிலும் அகற்றப்படும்.
Bu hikaye Dinamani Chennai dergisinin March 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin March 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.