அவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும். போர்தான் இதற்குத் தீர்வு!'
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த திங்கள்கிழமை ஏவுகணைகளை வீசி தாக்கியதைத் தொடர்ந்து, அந்த நாட்டுக்கான தேசிய பாதுகாப்பு விவகார அமைச்சர் பென் கிவிர் கூறியது இது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், "எங்கள் நாட்டில் தாக்குதல் நடத்திவிட்டு, பதிலடியிலிருந்து தப்பிவிடலாம் என்று யாராவது நினைத்தால், அவர்கள் மிகப் பெரிய தவறு செய்கிறார்கள் என்று அர்த்தம். வடக்கு இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். எனவே, ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்கத் தயாராகிவிட்டோம்' என்றார்.
ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை திட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை அந்த நாட்டு நிதியமைச்சர் பெஸாலெல் ஸ்மாட்ரிச் கூறியதைக் கொண்டு ஓரளவு ஊகிக்க முடியும்.
"இஸ்ரேல் பகுதியிலிருந்து தெற்கு லெபனானின் கலீலி பகுதிக்கு தரைவழியாக தாக்குதல் நடத்தி முன்னேற வேண்டும். அந்தப் பகுதியை ஆக்கிரமித்து, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை விரட்டவேண்டும். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையேதான் ஹிஸ்புல்லாக்கள் ஒளிந்துள்ளனர்.
எனவே, பொதுமக்களையும் சேர்த்து அங்கிருப்பவர்கள் அனைவரையும் லிடானி நதிக்கு அப்பால் துரத்த வேண்டும்' என்பதுதான் ஸ்மாட்ரிச் வெளியிட்ட திட்டம். அவர் கூறும் லிடானி நதியின் மறுகரை இஸ்ரேல் எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin June 06, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin June 06, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை.. வெற்றிப் பாதையில் இஸ்ரேல்?
ஐ.நா. பொதுச் சபையில் பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறு சூளுரைத்த மறுநாளே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை அவரது ராணுவம் குறிவைத்துக் கொன்றிருக்கிறது.
டெஸ்ட்: வரலாற்றுத் தோல்வியை நோக்கி நியூஸிலாந்து
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூசிலாந்து 'ஃபாலோ ஆன்' பெற்று விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 88 ரன்களுக்கே ஆட்டமிழந்த அந்த அணி, மோசமான டெஸ்ட் தோல்வியை எதிர்நோக்கி இருக்கிறது.
சபலென்கா, பாலினி முன்னேற்றம்
சீனா ஓபன் டென்னிஸ்போட்டியில் முன்னணி வீராங்கனைகள் அரினா சபலென்கா, ஜேஸ்மின் பாலினி ஆகியோர் 3ஆவது சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.
ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ்
‘காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரிகள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
பிகாரில் தொடரும் கனமழை: 13 லட்சம் பேர் பாதிப்பு
பிகாரில் தொடரும் கனமழையால் வால்மீகிநகா் மற்றும் பிா்பூா் அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டதால் மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 13.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
விவசாயிகள் நல ஆணையம்; ராணுவ தியாகிகளின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி
மாநிலத்தில் விவசாயிகள் நலனைக் காக்க ஆணையம், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 கோடி நிவாரண நிதி என்பன உள்ளிட்ட பல்வேறு கூடுதல் தேர்தல் வாக்குறுதிகளை ஹரியாணா மாநில காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது.
அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
இலங்கை கடற்படையினரால் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
தரமற்ற 53 வகை மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்துவதில்லை
தேசிய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் தரமற்க அறிவித்துள்ள 53 வகையான மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்துவதில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மேம்படுத்த வேண்டும்
தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலமாக மேம்படுத்த வேண்டும் என பனப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.