
நாட்டில் கடந்த 1975, ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதி 'அரசமைப்பு படுகொலை தினமாக' அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அரசமைப்புச் சட்டத்தை முன் வைத்து, ஆளும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில், 'கடந்த 1975, ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய அரசால் அதிகார துஷ்பிரயோகம் கட்டவிழ்க்கப்பட்டது. நாட்டு மக்கள் அத்துமீறல்களுக்கும் அராஜகங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் மீண்டெழும் ஜனநாயக வலிமையின் மீது மக்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே, அவசரநிலை காலகட்டத்தில் பாதிப்பை எதிர்கொண்டவர்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகப் போராடியவர்களை நினைவுகூரவும், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசமான அதிகார துஷ்பிரயோகத்தை எந்த விதத்திலும் இந்திய மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை மீண்டும் உறுதிசெய்யவும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதி அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மக்களின் உணர்வை கெளரவிக்கும் நோக்கில்...': மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1975, ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவின் குரல்வளையை நெரித்தார். இது, சர்வாதிகார மனநிலையின் வெட்கக்கேடான வெளிப்பாடு.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin July 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

நகைக் கடன் பெற கட்டுப்பாடு; வைகோ கண்டனம்
வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம்; ராமதாஸ் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது.
நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை
கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் நுண் துளை வாயிலாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை கிளெனீகில்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை
சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருமுறை சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு: வரைவு விதிகளுக்கு ஒப்புதல்
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஆண்டுதோறும் இருமுறை நடத்தும் வரைவு விதிமுறைகளுக்கு அந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தற்காப்புக் கலையில் சென்னை பள்ளி மாணவிகள் மூன்று உலக சாதனை
உலக தற்காப்புக் கலை வரலாற்றில் சென்னை பள்ளி மாணவிகள் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலம்
சென்னையில் டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.