சட்ட மசோதாவுக்கு கர்நாடக மாநில தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சட்ட மசோதா நிறைவேற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை கட்டாயமாக்கும் வகையில் "கர்நாடக மாநில உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதா 2024' க்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு விகிதம்: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் மேலாண்மை வேலைகளில் 50 சதவீதம், மேலாண்மை அல்லாத வேலைகளில் 75 சதவீதம், "சி', "டி' பிரிவு வேலைகளில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வழங்க இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.
இந்த சட்டத்தின்படி பத்தாம் வகுப்பு தேர்வில் மொழிப் பாடமாக கன்னடம் படிக்காதவர்கள், கன்னடத் தேர்வைத் தனியாக எழுதித் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த சட்ட மசோதாவின் விதிகளை அமல்படுத்துவதற்கென உதவி தொழிலாளர் ஆணையர் அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். சட்ட விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூலை 18) தாக்கல் செய்ய முதல்வர் சித்தராமையா திட்டமிட்டிருந்தார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin July 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இஸ்லாமாபாதில் எஸ்சிஓ மாநாடு: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அக்டோபா் மாதம் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு அந்நாட்டு அரசு வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகம்
பிரிட்டன் கல்வி நிறுவனத்துக்கு ஒப்புதல்
மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலம்
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்
தமிழ்நாட்டில்தான் மின்சாரக் கட்டணம் குறைவு
மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் மின்சார கட்டணம் குறைவாக உள்ளது என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் கே.நாராயணசாமி
3 ஆண்டுகளில் 6,744 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுகாதாரத் துறையில் 6,744 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தனியார் மூலம் தூய்மைப் பணி: மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
மார்க்சிஸ்ட், விசிக வெளிநடப்பு
சென்னையில் நாளை ஃபார்முலா கார் பந்தயம்: ஏற்பாடுகள் தயார்
வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு