
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது.
விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
விழாவில் ராஜ்நாத் சிங் பேசியது: மாநில எல்லையைத் தாண்டி ஆதிக்கம் செலுத்தியவர் கருணாநிதி. சமூக நீதியின் காவலராகத் திகழ்ந்த அவரின், மக்கள் நலன்சார்ந்த பங்களிப்பால் தமிழ் நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே பயன்பெற்றது. அவரது தொலைநோக்குப் பார்வை, செயல்பாடுகள் அனைத்தும் ஜனநாயகத்தின் மீதும், வளர்ச்சியை மையப்படுத்தியுமே இருந்தன.
தேசிய முகம்: ஐந்து முறை முதல்வராக இருந்து, சாதாரண, சாமானிய மக்களின் தேவைகளை நிறைவேற்றினார். சீறும் அலைகளை கொண்ட இந்திய அரசியல் எனும் கடலில் கருணாநிதி ஒரு மாநிலத் தலைவராக மட்டுமல்லாது, தேசிய முகமாகவும் திகழ்ந்தவர். தேசிய அரசியலில் பங்கெடுத்தவர். குறிப்பாக, கூட்டணி ஆட்சி யில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சிகளைத் தாண்டி அனைத்துத் தலைவர்களிடமும் உரையாடுபவராக இருந்தார்.
இந்திய ஜனநாயகத்தில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மாநில உரிமைகளை வலியுறுத்தியதுடன், அதிகாரங்கள் சரி சமமாகப் பகிரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நம்மிடையே உள்ள வேறுபாடுகள் மதிக்கப்படுவதுடன், மக்களுக்காக இணைந்து உழைப்பதில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற பதில் உறுதிப்பாடு கொண்டிருந்தார்.
1960-களில் தலைவராக உருவெடுத்தார் கருணாநிதி. அப்போது, பஞ்சாபில் இருந்து தமிழ் நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கட்சிகள் உருவாகின. அந்தக் கட்சிகள் மாயமான நிலையில், கருணாநிதி போட்ட வலுவான அடித்தளத்தில் இப்போது வரை திமுக ஆட்சியில் இருக்கிறது.
அரசியல் கட்சிகள், வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்கள் இருந்தாலும், அனைவரும் இணைந்து நிலையான ஆட்சி யைத் தர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் கருணாநிதி.
Bu hikaye Dinamani Chennai dergisinin August 19, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin August 19, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

நகைக் கடன் பெற கட்டுப்பாடு; வைகோ கண்டனம்
வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம்; ராமதாஸ் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது.
நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை
கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் நுண் துளை வாயிலாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை கிளெனீகில்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை
சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருமுறை சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு: வரைவு விதிகளுக்கு ஒப்புதல்
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஆண்டுதோறும் இருமுறை நடத்தும் வரைவு விதிமுறைகளுக்கு அந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தற்காப்புக் கலையில் சென்னை பள்ளி மாணவிகள் மூன்று உலக சாதனை
உலக தற்காப்புக் கலை வரலாற்றில் சென்னை பள்ளி மாணவிகள் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலம்
சென்னையில் டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.